|
நேடவெரி
யாகியிரு பாலுமடி பேணித்
தேடவுறை யுந்நகர் திருப்புகலி யாமே. 9
|
1784.
|
கற்றமண
ருற்றுலவு தேரருரை செய்த
குற்றமொழி கொள்கைய திலாதபெரு மானூர்
பொற் றொடிமடந்தையரும் மைந்தர்புல னைந்துஞ்
செற்றவர் விருப்புறு திருப்புகலி யாமே. 10 |
1785.
|
செந்தமிழ்
பரப்புறு திருப்புகலி தன்மேல்
அந்தமுத லாகிநடு வாயபெரு மானைப் |
தலைவரும், திரு மால்,
பிரமர் தேட எரியுருவமாய்த் தோன்றி அவர்கள்
கீழும், மேலும் அடி முடிகளைத் தேட நின்ற வருமான சிவபிரான் உறையும்
நகர் திருப் புகலியாகும்.
கு-ரை:
கோடல்-வெண்காந்தள், குலாய - குலவிய, நேட-தேட. பேணி
- விரும்பி.
10. பொ-ரை:
கல்வி கற்ற அமணர்களும், நூலறிவில் தேர்ந்துலவும்
புத்தர்களும் மெய்ப்பொருள் அறியாது கூறும் குற்றம் பொருந்திய
கொள்கைகளை ஏலாதவனது ஊர், பொன்னால் இயன்ற வளையல்களை
அணிந்த மகளிரும் மைந்தர்களும், ஐம்புலன்களையும் வென்றஞானியரும்
விரும்பும் திருப்புகலியாகும்.
கு-ரை:
கற்ற அமணர்-அவைதிகநூல்களைப்படித்த சமணர். குற்றம்
மொழி - குற்றங்களையுடையவார்த்தைகளை, கொள்கையது-கொள்ளுவது.
தொடி-வளையல்.
மடந்தையர்-மகளிர்.
மைந்தர்-ஆடவர். புலன் ஐந்தும்
செற்றவர்-ஐம்புலத்தாசையையும் அகற்றிய ஞானியர்.
11. பொ-ரை:
செந்தமிழ் மொழிபரவி வளரும் திருப் புகலியில்
எழுந்தருளிய ஆதி, அந்தம், நடு எனப்படும் மூவகையாகவும் விளங்கும்
பெருமான்மீது, ஞானசம்பந்தன் உரைத்தருளிய இத்திருப்பதிகப் பாடல்களைக்
கொண்டு இசையோடு இயலும் வகையில் பாடிப் பரவுவார், வீடு பேற்றுக்கு
உரியவர் ஆவர்.
|