பக்கம் எண் :

468

பந்தனுரை செய்தமிழ்கள் பத்துமிசை கூர
வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே. 11

திருச்சிற்றம்பலம்


     கு-ரை: ‘செந்தமிழ் பரப்பு உறு திருப்புகலி’ என்றதால், பண்டு
சீர்காழியின் கண் இருந்த தமிழ் வளர்ச்சி புலனாகும். முதல் அந்தம்
ஆகி என மாற்றுக. பந்தன்-சம்பந்தர். தமிழ்கள்-தமிழ்ப்பாடல்கள்,
இசைகூர-பண்ணிசைமிக. வந்தவணம்-வந்தவாறு. (பார்க்க: 170:112.)

 திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ்
       சிறுபறைப் பருவம்.

அருகரொடு புத்தர்குல காலா
   அழல்வலி தவிர்த்ததமிழ் வீரா
முருகுகமழ் கொச்சைவள நாடா
   முடுகுதிறல் மிக்ககலி கோபா
பருவரையை யொத்ததிர டோளா
   பரனையறி வித்தவிர லாளா
திருவிசை யளித்தகனி வாயா
   சிறுபறை முழக்கியரு ளாயே.

இனவமணர் பொய்ச்சொல்பெரு காமே
   யெழுகலி தலத்தைநலி யாமே
மனுவழி பிழைக்கநட வாமே
   வழுதியுடல் வெப்பிலுரு காமே
முனிவர்கள் தவத்தையொழி யாமே
   முதன்மறை வழக்குமழி யாமே
தினகரனை யொத்தவொளி யானே
   சிறுபறை முழக்கியரு ளாயே.

-ஸ்ரீமாசிலாமணி தேசிகர்.