பக்கம் எண் :

472

தனற்படு சுடர்ச்சடை தனிப்பிறையொ டொன்றப்
புனற்படு கிடக்கையை புறம்பயம் அமர்ந்தோய். 6
1792.



மறத்துறை மறுத்தவர் தவத்தடிய ருள்ளம்
அறத்துறை யொறுத்துன தருட்கிழமை பெற்றோர்
திறத்துள திறத்தினை மதித்தகல நின்றும்
புறத்துள திறத்தினை புறம்பயம் அமர்ந்தோய்.  7
1793.

இலங்கைய ரிறைஞ்சிறை விலங்கலின் முழங்க
உலங்கெழு தடக்கைக ளடர்த்திடலு மஞ்சி


ராயின் அவர் எத்தொழிலை மேற்கொண்டவர் ஆயினும் அவர்தம் தீ
வினைகட்குப் பகையாயிருந்து தீர்ப்பவன்நீ. தீக் கொழுந்து போன்ற ஒளி
பொருந்திய சடையில் தனித்த பிறையோடு பொருந்தக் கங்கை கிடக்குமாறு
செய்துள்ளவன், நீ.

     கு-ரை: அனல்படு தடக்கையவர்-செந்தீ வளர்க்கும் கையுடைய
அந்தணர். ‘எரியோம்புஞ் சிறப்பர்’ (தி.1ப.80பா.2.) வினைப்பகை-வினைக்குப்
பகைவன். தனல்-தணல். புனல்-கங்கை. கிடக்கையை-கிடத்தலை உடையாய்.

     7. பொ-ரை: புறம்பயம் அமர்ந்தோய்! பாவமான செயல்களை
விரும்பாத தவத்தைப்புரியும் அடியவர் உள்ளங்களில் அறநெறிப் பயனையும்
அடைய விரும்பாத வாறு அதனைக் கடிந்து, உன் அருள் உரிமையைப்
பெற்றோர் திறத்தினுக்கு ஏற்ப அருள் வழங்கும் தன்மையனாய் வேறாய்
நின்றும் அருள் புரிபவன் நீ.

     கு-ரை: மறத்துறை-பாபமார்க்கம். மறுத்தவர்-வேண்டாதார்.
தவத்து அடியர்-தவத்தையுடைய அடியவர். அறத்துறை ஒறுத்து-புண்ணிய
மார்க்கத்தையும் கடிந்து. இருவினை யொப்புடைமை குறித்தபடி.
அருட்கிழமை-சிவஞானத்திற்கு உரியராந்தன்மை. திறம்-சரியை முதலிய
நான்கு திறங்கள். சரியையாளர் திறத்திற்குத் தக்கவாறு அருள்செய்யும்
இறைவனது திறத்தைக் குறித்தபடி. மதித்து அகல நின்றும் புறத்து
உளதிறத்தினை என்பது இறைவனது ஒன்றாய் வேறாய் உடனாயிருக்கும்
மூன்று இயல்புகளுள் வேறாய் நிற்பதைக் குறித்தது.

     8. பொ-ரை: புறம்பயம் அமர்ந்தவனே! இலங்கை மக்கள் வணங்கும்
தலைவனாகிய இராவணன் மலையின் கீழ் அகப்பட்டு