பக்கம் எண் :

476

31. திருக்கருப்பறியலூர்

பதிக வரலாறு:

     திருநாரையூரை அருந்தமிழ் புனைந்து வழிபட்ட நாயனார் அடியார்களை வானுலகம் ஏற்றக் கற்றவனாகிய சிவபிரான் வீற்றிருக்குங் கருப்பறியலூரை அடைந்து தொழுது, பாடிப் பரவிய அடியவர் வினையை எளிதில் ஒழித்திடுமாறு பாடியருளியது இத்தமிழ்க்கிளவி.

திருவிராகம்

பண்: இந்தளம்

ப. தொ. எண்: 167                             பதிக எண்: 31

திருச்சிற்றம்பலம்

1797.



சுற்றமொடு பற்றவை துயக்கற வறுத்துக்
குற்றமில் குணங்களொடு கூடுமடி யார்கள்
மற்றவரை வானவர்தம் வானுலக மேற்றக்
கற்றவ னிருப்பது கருப்பறிய லூரே.        1
1798.

வண்டணைசெய் கொன்றையது வார்சடைகண்மேலே
கொண்டணைசெய் கோலமது கோளரவி னோடும்


     1. பொ-ரை: சுற்றம், பற்று ஆகியவற்றை முற்றிலும் அறுத்துக்
குற்றமற்ற நல்ல குணங்களோடு கூடி விளங்கும் அடியவர்களைத்
தேவர்கள் வாழும் வானுலகம் ஏற்றலைச் செய்யும் சிவபிரான்
இருக்குமிடம் கருப்பறியலூர்.

     கு-ரை: சுற்றமொடு பற்று அவை- (துணையும்) சுற்றமும் பற்றும்
ஆகியவற்றை. இவ்வாறு கருமூலத்தைப் பறிப்பதால் கருப்பறியலூர்
என்றாயிற்று. கலந்தவர் கருப்பறியல் என ஆசிரியரே இப்பதிக முடிவில்
ஊர்ப்பெயர்ப் பொருளை உணர்த்தியது உணர்க. துயக்கு-அறிவு வேறுபடல்.
சிவபிரானையே அறியும் அறிவு வேறு படாதவாறு சுற்றம் முதலியவற்றை
அறுத்து என்றபடி. மற்று அசை. அடியார்களாகிய அவரை என்க.
வானுலகம்-வீட்டுலகு. கற்றவன்-இயல்பாகவே உணர்ந்த சிவன்.

     2. பொ-ரை: வண்டுகள் அணைதலைச் செய்கின்ற கொன்ய நீண்ட சடைமுடிமீது அணிந்து, துன்பம் செய்யும்