பதிக வரலாறு:
போகமார்த்த
பூண்முலையாள் எனத் தொடங்குந் திருப்பதிகத்தோடு
பாடப்பட்டதாயிருக்கலாம் என்று தோன்றுகிறது.
திருவிராகம்
பண்:
இந்தளம்
ப.தொ.எண்:
169 பதிக
எண்: 33
திருச்சிற்றம்பலம்
1819.
|
ஏடுமலி
கொன்றையர விந்துவிள வன்னி
மாடவல செஞ்சடையெ மைந்தனிட மென்பர்
கோடுமலி ஞாழல்குர வேறுசுர புன்னை
நாடுமலி வாசமது வீசியநள் ளாறே. 1
|
1820.
|
விண்ணியல்
பிறைப்பிள வறைப்புனன் முடித்த
புண்ணிய னிருக்குமிட மென்பர்புவி தன்மேல்
பண்ணிய நடத்தொடிசை பாடுமடி யார்கள்
நண்ணிய மனத்தின்வழி பாடுசெய்நள் ளாறே. 2 |
1. பொ-ரை:
இதழ்கள் நிறைந்த கொன்றைமலர், பாம்பு, திங்கள்,
வன்னிஇ்லை ஆகியவற்றை அணிந்த செஞ்சடையை உடைய சிவபிரானது
இடம் கிளைகளோடு கூடிய ஞாழல், குரவு. சுரபுன்னை முதலிய மரங்களின்
மணம் வீசும் திருநள்ளாறு ஆகும்.
கு-ரை:
ஏடு-இதழ். இந்து-பிறை. வன்னி-வன்னிப் பத்திரம். மாடு
அவலசெஞ்சடை-பொன்னை ஒவ்வாதென்று அவலம் உறுத்தும் செஞ்சடை.
கோடு-கொம்புகள். ஞாழல்-புலிநகக் கொன்றை, கோங்கெனலுமாம்.
குரவு-குராமரம். வாசம்-மணம், நள்ளாறே மைந்தனிடம் என்பர்; இவ்வாறே
ஏனையவும் ஒட்டுக.
2. பொ-ரை:
வானில் இயங்கும் பிறைமதியோடு கங்கையையும்
முடியில் சூடிய புண்ணியனாகிய சிவபிரான் இருக்குமிடம், உலகில்
ஆடிப்பாடி அடியவர்கள் மனம் பொருந்த வழிபாடு செய்யும் திருநள்ளாறு
ஆகும்.
|