திருஞானசம்பந்தர்
புராணம்
மருங்குளநற்
பதிகள்பல பணிந்துமா நதிக்கரைபோய்க்
குரங்காடு துறையணைந்து குழகனார் குரைகழல்கள்
பெருங்காத லிற் பணிந்து பேணியஇன் னிசைபெருக
அருங்கலைநூல் திருப்பதிகம் அருள்செய்து பரவினார்.
-சேக்கிழார்.
தேவாரம்
ஓதுவோர் பெருமை
தனமனர்
சிரபுர நகர்இறை
தமிழ்விர கனதுஉரை யொருபதும்
மனமகிழ் வொடுபயில் பவர்எழில்
மலர்மகள் கலைமகள் கயமகள்
இனமலி புகழ்மகள் இசைதர
இருநில னிடைஇனி தமர்வரே.
-(தி.
1. பதி.20. பா.11) திருஞானசம்பந்தர்.
|