பக்கம் எண் :

512

செந்தண் டமிழ்செப் பியபத் திவைவல்லார்
பந்தம் மறுத்தோங் குவர்பான் மையினாலே.   11

                       திருச்சிற்றம்பலம்


சண்பைப் பதிக்குரிய ஞானசம்பந்தன் செவ்விய தண்டமிழால் செப்பிய
இப்பதிகப்பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர் மலபந்தம் நீங்கி உயர்ந்த
தன்மையைப் பெறுவர்.

     கு-ரை: சந்தம் பயில்-வேதம் ஓதாது ஓதியுணர்ந்த. சந்தக்கவி
பாடிப்பயின்ற எனலும் ஆம். பந்தம்-(மும்மலக்) கட்டு; ஈசனது சண்பையை
உள்குகின்ற ஞானசம்பந்தன். செப்பிய-பாடிய. பான்மை-தன்மை.

திருஞானசம்பந்தர் புராணம்

தேவர்பிரான் அமர்ந்ததிரு இரும்பூளை சென்றெய்தக்
காவணநீள் தோரணங்கள் நாட்டியுடன் களிசிறப்பப்
பூவண மா லைகள்நாற்றி பூரணபொற் குடம்நிறைத்தங்
கியவர்களும் போற்றிசைப்பத் திருத்தொண்டர் எதிர்கொண்டார்.

வண்டமிழின் மொழிவிரகர் மணிமுத்தின் சிவிகையினைத்
தொண்டர்குழாத் தெதிர்இழிந்தங் கவர்தொழத்தா முந்தொழுதே
அண்டர்பிரான் கோயிலினை அணைந்திறைஞ்சி முன்நின்று
பண்டரும்இன் னிசைப்பதிகம் பரம்பொருளைப் பாடுவார்.

நிகரிலா மேருவரை அணுவாக நீண்டானை
நுகர்கின்ற தொண்டர்தமக் கமுதாகி நொய்யானைத்
தகவொன்ற அடியார்கள் தமைவினவித் தமிழ்விரகர்
பகர்கின்ற அருமறையின் பொருள்விரியப் பாடினார்.

                                         -சேக்கிழார்.