பக்கம் எண் :

520

1871.



வேதம் பலவோ மம்வியந் தடிபோற்ற
ஓதம் முலவும் மறைக்காட் டிலுறைவாய்
ஏதில் சமண்சாக் கியர்வாக் கிவையென்கொல்
ஆத ரொடுதா மலர்தூற் றியவாறே.          10
1872.



காழிந் நகரான் கலைஞான சம்பந்தன்
வாழிம் மறைக்கா டனைவாய்ந் தறிவித்த
ஏழின் னிசைமாலை யீரைந் திவைவல்லார்
வாழி யுலகோர் தொழவா னடைவாரே.        11

                    திருச்சிற்றம்பலம்


என்று இயைக்க. “நீலத்தார் கரியமிடற்றார் நல்ல நெற்றிமேல் உற்ற
கண்ணினார் பற்று, சூலத்தார் சுடலைப்பொடி நீறணிவார் சடையார்,
சீலத்தார் தொழுதேத்து சிற்றம்பலம்” (தி.3 பதி.1 பா.3) எனத்
தில்லையிற்கண்ட உருத்திரகண தரிசனத்தை உணர்த்தியவாறறிக. ஏனம் -
பன்றி. கழுகானவர்-பிரமனார். (தி.2, ப.168. பா.9) வானத்தில் கழுகும்
தலத்தில் ஏனமும் என இயைக்க, எதிர்நிரல்நிறை. அரியும் அயனும்
அடிமுடி தேடியதன் கருத்தை வினாவியது.

     10. பொ-ரை: வேதங்கள் பலவும் வேள்விகள் செய்து வியந்து
உன் திருவடிகளைப் போற்ற, கடல்நீர் உலவும் மறைக்காட்டில் உறைகின்ற
பெருமானே! வைதிக நெறியினர்க்கு அயலவராகிய சமணர் சாக்கியர்களாகிய
அறிவற்றவர்கள் உரைகளால் உம்மை அலர் தூற்றுதற்குக் காரணம் யாதோ?

     கு-ரை: ஓமம் - யாகம். மறைக்காடு என்றதன் பெயர்க் காரணம்
ஈண்டும் விளக்கியருளினார். ஓதம் - கடல். ஏதில் - அயல். ‘ஏதிலார்
குற்றம்’ ‘ஏதிலார் ஆர’ (திருக்குறள்) ஈண்டுச் சமயத்தால் அயலவராயினார்.
ஆதர்-அறிவின்மையுடையவர். அலர் - பழிச் சொல். அவைதிக மதத்தினர்
அழியாத வைதிக சைவ சமயத்தைப் பழித்துரைத்ததன் கருத்தை வினாவியது.

     11. பொ-ரை: காழி நகரில் தோன்றிய கலைகளில் வல்ல ஞான
சம்பந்தன் வாழ்த்துதற்குரிய மறைக்காட்டில் உறையும் ஈசனைத் தரிசிக்கும்
பேறு வாய்த்து அறிவித்த ஏழிசை பொருந்திய இப்பதிகப் பாமாலையை
ஓதி வழிபட வல்லவர், வாழும் இவ்வுலகோர் தொழவான் அடைவர்.