பக்கம் எண் :

528

     கு-ரை: ஏனையோர்-உபமன்யு முனிவர், இயற்பகை நாயனார்,
ஆதிசேடன் முதலியோர் (தி. 4 பதி.56 பா.5) ஊனம்-சொற் குற்றம்,
பொருட்குற்றம், அநாசாரம், அன்பின்மை முதலியவை பாராயணத்துக்கு
ஊனங்கள்.

ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை

அடுசினக் கடகரி அதுபட உரித்த
படர்சடைக் கடவுள்தன் திருவரு ளதனாற் பிறந்தது
கழுமலம் என்னுங் கடிநக ரதுவே வளர்ந்தது
தேங்கமழ் வாவிச் சிலம்பரை யன்பெறு
பூங்குழல் மாதிடு போனகம் உண்டே; பெற்றது

குழகணைப் பாடிக் கோலக்காப் புக்கு
அழகுடைச் செம்பொற் றாளம் அவையே; தீர்த்தது
தாதமர் மருகற் சடையனைப் பாடிப்
பேதுறு பெண்ணின் கணவனை விடமே; அடைத்தது
அரைசோ டிசையா அணிமறைக் காட்டுக்

குரைசேர் குடுமிக் கொழுமணிக் கதவே; ஏறிற்று
அத்தியும் மாவுந் தவிர அரத்துறை
முத்தின் சிவிகை முன்னாட் பெற்றே; ஏறிற்று
அருமறை ஓத்தூர் ஆண்பனை யதனைப்
பெருநிறம் எய்தும் பெண்பனையாவே; கொண்டது

பூவிடு மதுவிற் பொறிவண் டுழலும்
ஆவடு துறையிற் பொன்னா யிரமே; கண்டது
உறியொடு பீலி ஒருகையிற் கொள்ளும்
பறிதலைச் சமணைப் பல்கழு மிசையே; நீத்தது
அவிழ்ச் சுவை யேஅறிந் தரனடி பரவும்

தமிழ்ச்சுவை அறியாத் தம்பங் களையே; நினைந்தது
அள்ளற் பழனக் கொள்ளம் பூதூர்
இக்கரை ஓடம் அக்கரைச் செலவே; மிக்கவர்
ஊனசம் பந்தம் அறுத்துயக் கொளவல
ஞானசம் பந்தன்இஞ் ஞாலத் திடையே.

                          -நம்பியாண்டார் நம்பி.