|
பண்ணார்மொழி
மங்கையோர் பங்குடையான்
பரங்குன்றம் பருப்பதம் பேணிநின்றே
எண்ணாயிர வும்பகலு
மிடும்பைக்கட னீந்தலாங் காரணமே. 2 |
1886.
|
அட்டானமென்
றோதிய நாலிரண்டு
மழகன்னுறை காவனைத் துந்துறைகள்
எட்டாந்திரு மூர்த்தியின் காடொன்பதுங்
குளமூன்றுங் களமஞ்சும் பாடிநான்கும்
மட்டார்குழ லாண்மலை மங்கைபங்கன்
மதிக்கும்மிட மாகிய பாழிமூன்றும்
சிட்டானவன் பாசூரென் றேவிரும்பா
யரும்பாவங்க ளாயின தேய்ந்தறவே. 3 |
காரணமாய் அமையும்.
கு-ரை:
முத்தாறு-விருத்தாசலத்தின் அருகே ஒடும் ஆற்றின் பெயர்.
வாட்போக்கி-ரத்நகிரி. வாள்-ஒளி. போக்கி-போகச் செய்வது. ஒளிவீசும்
அரதனகிரி என்க. ஈற்றடி கிடைத்திலது.
3. பொ-ரை:
இறைவனின் எட்டு வீரட்டங்களையும் அழகனாகிய
அப்பெருமானுறையும் காடு, துறை, நாடு, குளம், களம், பாடி, பாழி என
முடியும் தலங்களையும் அரிய பாவங்கள் தேய்ந்தொழிதற் பொருட்டு
விரும்புவாயாக.
கு-ரை:
அட்டானம் என்று ஓதிய நாலிரண்டும்-எட்டு
வீரட்டங்களும், அட்டானம்-அஷ்டஸ்தாநம் என்பதன் திரிபு. கா, துறை,
காடு, குளம், களம், பாடி, பாழி என முடியும் தலங்களையும் அவற்றுள்
கா அல்லாதவற்றின் தொகையையும் குறித்தமை காண்க. சிட்டன்-சிஷ்டன்.
காடொன்பது- திருமறைக்காடு, தலைச்சங்காடு, தலையாலங்காடு, சாய்க்காடு,
கொள்ளிக்காடு, ஆலங்காடு, பனங்காடு, வெண்காடு, வேற்காடு,
கோட்டுக்காடு, நிறைக்காடு, மிறைக்காடு, இறைக்காடு என்பவும் உள.
(சுந்தரர் ஊர்த்தொகை. 3) குளமூன்றும் களம் அஞ்சும்-திருக்குளம்,
இடைக்குளம், பாற்குளம், வளைகுளம், கடிக்குளம், தஞ்சைத் தளிக்குளம்
என்பவற்றுள் எம்மூன்றோ? வளைகுளமும் தளிக்குளமும் நல்லிடைக்குளமும்
திருக்குளத்தோடு அஞ்
|