பக்கம் எண் :

531

1887.







அறப்பள்ளி யகத்தியான் பள்ளிவெள்ளைப்
     பொடிப்பூசி ஆறணிவானமர் காட்டுப்பள்ளி சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன்பள்ளி
     திருநனிபள்ளி சீர் மகேந்திரத்துப் பிறப்பில்லவன் பள்ளிவெள் ளச்சடையான்
     விரும்பும்மிடைப் பள்ளிவண் சக்கரமால்
உறைப்பாலடி போற்றக் கொடுத்தபள்ளி
     யுணராய்மட நெஞ்சமே யுன்னிநின்றே.  4
1888.




* * * * * * * * * *
ஆறைவட மாகற லம்பரையா
றணியார்பெரு வேளுர் விளமர்தெங்கூர்
சேறைதுலை புகலூ ரகலா
திவைகாதலித் தானவன் சேர்பதியே.        5


சைக்களம் விள்ளாத நெடுங்களம் வேட்களம்’ (அப்பர். அடைவு
திருத்தாண்டகம்). வேறு இரண்டு களம் யாவையோ? பாடி நான்கு-எதிர்
கொள்பாடி, மழபாடி, பிற எவையோ? வலிதாயம் (பாடி) சேரின் மூன்றாம்.
பாழி மூன்று-திருவரதைப் பெரும்பாழி, களப்பாழி பிறிதொன்று யாதோ?

     4. பொ-ரை: நெஞ்சமே! கோயில் எனப் பொருள் தரும் பள்ளி
என முடிவன வாய கொல்லி அறைப்பள்ளி அகத்தியான் பள்ளி முதலான
தலங்களை உன்னி உணர்வாயாக, உனக்குப் பயன்பல விளையும்.

     கு-ரை: பிறப்பில்லவன்-‘பிஞ்ஞகா பிறப்பிலி’ பிறப்பிற்குக்
காரணமாகிய பேதைமை இயல்பாகவே இல்லாதவன். உறைப்பு-திருவருள்
உறைப்பு, அன்பின் அழுத்தம்.

     5. பொ-ரை: சிவபிரான் காதலித்து உறையும் பதிகள் பழையாறை
மாகறல் முதலான தலங்களாகும். அவற்றைச் சென்று தொழுவீர்களாக.

     கு-ரை: மாகறல், அம்பர், ஐயாறு, அணி-அழகு. துலைபுகலூர்-என்ற
குறிப்பால், பெயர்க்காரணம் ஒருவாறு ஊகிக்கப்படுகின்றது.