1891.
|
*
* குலாவுதிங்கட்சடையான் குளிரும் பரிதிநியமம்
போற்றூரடி யார்வழி பாடொழியாத்தென்
புறம்பயம் பூவணம் பூழியூரும்
காற்றூர்வரை யன்றெடுத் தான்முடிதோ
ணெரித்தானுறை கோயிலென்றென் றுநீகருதே. 8 |
1892.
|
நெற்குன்றமோத்
தூர்நிறை நீர்மருக
னெடுவாயில் குறும்பலா நீடுதிரு
நற்குன்றம் வலம்புரந் நாகேச்சுர
நளிர்சோலையுஞ் சேனைமா காளம்வாய்மூர்
கற்குன்றமொன் றேந்தி மழைதடுத்த
கடல்வண்ணனு மாமல ரோனுங்காணாச்
சொற்கென்றுந் தொலைவிலா தாழனுறையுங்
குடமூக்கென்று சொல்லிக் குலாவுமினே. 9 |
1893.
|
குத்தங்குடி
வேதி குடிபுனல்சூழ்
குருந்தங்குடி தேவன் குடிமருவும்
அத்தங்குடி தண்டிரு வண்குடியு
மலம்புஞ்சலந் தன்சடை வைத்துகந்த |
8. பொ-ரை: திருப்பரிதிநியமம், திருப்புறம்பயம்
முதலான
தலங்கள் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் முடி, தோள்
ஆகியவற்றை நெரித்த சிவபிரான் உறையும் கோயில்கள் என நீ கருதுக.
கு-ரை: என்று-என்றும் நீ கருது என்க.
இதன் முழுப் பகுதியும்
கிடைத்திலது. பருத்தி நியமத்துறைவாய் (சுந்தரர். ஊர்த்தொகை. 8.)
என்று வேறொன்றுமுண்டு. அதனை வைப்புத் தலத்தில் அடக்கினர்.
9. பொ-ரை: நெற்குன்றம், ஓத்தூர்
முதலியதலங்களை எண்ணி
மகிழ்வாயாக.
கு-ரை: குறும்பலா-திருக்குற்றாலத் தலவிருட்சம்.
கற்குன்றம்-
கோவர்த்தனகிரி. காணாச்சொற்கு-காணாதபுகழ்க்கு. தொலைவு- அழிவு.
10. பொ-ரை: குத்தங்குடி, வேதிகுடி முதலான
குடிஎன முடியும்
தலங்கள் சிவபிரான் உமையம்மையாருடன் கூடி நெடுங்காலம்
|