பதிக
வரலாறு:
137 ஆவது பதிகத்
தலைப்பைக் காண்க.
பண்:
சீகாமரம்
ப.தொ.எண்:
176 |
|
பதிக.
எண்: 40 |
திருச்சிற்றம்பலம்
1895.
|
எம்பிரா
னெனக்கமுதம்
ஆவானுந் தன்னடைந்தார்
தம்பிரா னாவானுந்
தழலேந்து கையானுங்
கம்பமா கரியுரித்த
காபாலி கறைக்கண்டன்
வம்புலாம் பொழிற்பிரம
புரத்துறையும் வானவனே. 1 |
1.
பொ-ரை: எமக்குத்
தலைவன், எனக்கு அமுதம் போல
இனிப்பவன், தன்னை அடைபவர்களுக்குத் தம்பிரான், தழல்ஏந்திய கையான்,
அசையும் இயல்புடைய பெரிய யானையை உரித்துப் போர்த்த கபாலி,
இத்தகையோன் மணம் உலாவும் பொழில் சூழ்ந்த பிரமபுரத்தில் உறையும்
வானவனே யாவான்.
கு-ரை:
எம்பிரான்
ஆவானும், தன்னை அடைந்தவர் தம்பிரான்
ஆவானும், தழல் ஏந்திய கையானும், காபாலியும், கறைக்கண்டனும்
வானவனே என்று முடிக்க.
தம் - ஆன்மாக்கட்கு.
பிரான்-இனியன். பிரியமானவன் என்றும்
ஆன்மாக்கள் அநேகமாதலின் தம் என்றும், ஆண்டவன் ஏகனாதலின்
தன் என்றும் குறித்தனர் முன்னோர். தன்னானந்தக் கொடி-சிவகாமவல்லி
என்புழிக்காண்க.
கம்பம்-அசைவு.
கட்டுந்தூண். கரி-கரத்தையுடையது. யானை.
காபாலி-பிரம கபாலத்தை ஏந்தியவன். கறை-நஞ்சு. வம்பு-மணம்.
|