பக்கம் எண் :

549

1915.







குறங்காட்டு நால்விரலிற்
     கோவணத்துக் கோலோவிப்போய்
அறங்காட்டுஞ் சமணருஞ்
     சாக்கியரு மலர்தூற்றுந்
திறங்காட்டல் கேளாதே
     தெளிவுடையீர் சென்றடைமின்
புறங்காட்டி லாடலான்
     பூம்புகார்ச் சாய்க்காடே.           10


தேவர்க்கும் அவன் பெருமை அளந்து காணுதற்கு அரியதாகும். மகளிர்
பாடும் இசைப்பாடல் ஓவாதே கேட்கும் சாய்க்காட்டு எம்பெருமானைத்
தெய்வமாக விரும்பாதார் ஞானம்பெறார்.

     கு-ரை: வையம்-பூமி. மூவடிமண். நீர்-தத்தஞ் செய்நீர். ஏற்றான்-
மாவலிபால் இரந்த திருமால். ஐயன்மார் இருவர்-அயனும் அரியுமாகிய துவி
கர்த்தர்கள். அளப்பு-அளவிடுதல். தையலார்-பெண்டிர். ஓவா-இடைவிடாத.
பேணாதார்-விரும்பி வழிபடாதவர். தெளிவு-ஞானத்தேற்றம். சீலத்தால்
ஞானத்தால் தேற்றத்தால் சென்றகன்ற காலத்தால் ஆராத காதலால்-
ஞாலத்தார் இச்சிக்கச் சாலச் சிறந்தடி யேற்கினிதாம் கச்சிக்கச் சாலைக்
கனி’. எனப் பின்வந்த ஞானப்பாடலை அறிக. தேறோம்-அதை ஒரு
தெளிவாகக் கொள் ளோம், மதி யோம் என்றபடி.

    10. பொ-ரை: தொடைகளில் அடையும் நால்விரல் கோவண
ஆடையோடு உலாவித்திரிந்து அறம் போலக் கூறும் சமண் சாக்கியர்கள்
பழித்துரை கூறும் திறங்களைக் கேளாது, சுடுகாட்டில் நடனம் ஆடும்
பூம்புகார்ச்ர்க்காட்டு இறைவன் திருவடிகளைச் சென்று அடைவீர்களாக.

     கு-ரை: முதலீரடியும் புறப்புறச்சமயத்தார் நிலையும் செயலும்
பழையபதிப்பாசிரியர் பாடம்: ‘ஓலோவிப்போய்’ சுவாமி நாத பண்டிதர்
தரும் பாடபேதம் ‘உலாவிப் போய்’ புதுச்சேரிப் பதிப்பு தரும் பாடம்:
‘உலோவிப்போய்’