1927.
|
ஆட லமர்ந்தானை
யாக்கூரிற் றான்றோன்றி
மாட மமர்ந்தானை
மாடஞ்சேர் தண்காழி
நாடற் கரியசீர்
ஞானசம் பந்தன்சொல்
பாட லிவைவல்லார்க்
கில்லையாம் பாவமே. 11
|
திருச்சிற்றம்பலம்
11. பொ-ரை:
திருக்கூத்து ஆடுவதை விரும்புபவனாய்,
ஆக்கூரில் தான்தோன்றிமாடத்து எழுந்தருளிய சிவபிரானை ஏத்தி மாட
வீடுகள் நிரம்பிய சீகாழிப்பதியில் தோன்றிய அறிதற்கரிய புகழினனாகிய
ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகப்பாடல்கள் வல்லவர்கட்குப் பாவம்
இல்லை.
கு-ரை:
ஆடலமர்ந்தான்-திருக்கூத்தை விரும்பியாடியவனை.
அமர்ந்தான்-விரும்பியவன். தங்கியவன். நாடற்கு-ஆராய்தற்கு.
திருஞானசம்பந்தர்
புராணம்
தக்க
அந்தணர் மேவும்அப் பதியினில்
தான்தோன்றி மாடத்துச்
செக்கர் வார்சடை அண்ணலைப் பணிந்திசைச்
செந்தமிழ்த் தொடைபாடி
மிக்க கோயில்கள் பிறவுடன் தொழுதுபோய்
மீயச்சூர் பணிந்தேத்திப்
பக்கம் பாரிடம் பரவநின்றாடுவார்
பாம்புர நகர்சேர்ந்தார்.
-சேக்கிழார்.
|
|