43.
திருப்புள்ளிருக்குவேளூர்
|
பதிக
வரலாறு:
திருமறைச் சண்பையராளி
திருக்கண்ணார் கோயிலை ஏத்தினார்,
பிறகோயிலும் இறைஞ்சினார், காவிரிவடபால் குடதிசை நோக்கி
வருவாராய்க், காதல் பெருகப் புள்ளிருக்கு வேளூர்க்கோயிலை
நண்ணினார், ஏற்ற அன்பு எய்த வணங்கினார். இருவர் புள்வேந்தர்
இறைஞ்சி ஆற்றிய பூசையைச் சாற்றி இந்த நன்சொற்பதிகத்தை
அணிவித்தார்.
பண்:
சீகாமரம்
ப.தொ.எண்:
179 |
|
பதிக
எண்: 43 |
திருச்சிற்றம்பலம்
1928.
|
கள்ளார்ந்த
பூங்கொன்றை
மதமத்தங் கதிர்மதியம்
உள்ளார்ந்த சடைமுடியெம்
பெருமானா ருறையுமிடந்
தள்ளாய சம்பாதி
சடாயென்பார் தாமிருவர்
புள்ளானார்க் கரையனிடம்
புள்ளிருக்கு வேளூரே. 1 |
1.
பொ-ரை: தேன்நிறைந்த அழகிய கொன்றைமலர்,
கடுநாற்றத்தை உடைய ஊமத்தைமலர், ஒளிபொருந்திய திங்கள் ஆகியன
உள்ளே அமைந்து விளங்கும் சடையினனும், தள்ளத்தகாத பறவைப்
பிறப்படைந்து சம்பாதி சடாயு எனப்பெயரிய இருவர் வழிபட அவர்கட்கு
அரசனும் ஆகிய சிவபிரான் உறையும் இடம் புள்ளிருக்குவேளூர்.
கு-ரை:
கள்-தேன், ஆர்ந்த-நிறைந்த. மதமத்தம்-கடு
நாற்றத்தையுடைய ஊமத்தம். முடியையுடைய பெருமானார் என்க. தள்ளா-
தாழ்ந்த பறவைகள் எனக் கருதித் தள்ளிவிடத்தகாத உயிர்களாகிய சம்பாதி
சடாயு என்பர்தாம்; இருவர் புள் ஆனார். சம்பாதியும் சடாயுவும் பறவைப்
பிறப்பை அடைந்து வழிபட்ட வரலாறு. அரையன்-வைத்தியநாதர். இதில்
இருவரையும் உணர்த்தினார்.
|