பக்கம் எண் :

577

1955.







மங்கையோர் கூறுடையான்
     மன்னு மறைபயின்றான்
அங்கையோர் வெண்டலையா
     னாடரவம் பூண்டுகந்தான்
திங்களொடு பாம்பணிந்த
     சீரார் திருமுடிமேல்
கங்கையினான் மேவியுறை
     கோயில் கைச்சினமே.          6
1956.



வரியரவே நாணாக
     மால்வரையே வில்லாக
எரிகணையான் முப்புரங்க
     ளெய்துகந்த வெம்பெருமான்


    கு-ரை: தேய்ந்து மலி-குறைந்து வளரும். திங்களுக்கு இயல்பு
அடைமொழி. இது சிவபெருமான் திருமுடிமேற் பிறைக்கு அன்று.
இலங்கு-விளங்கும். மாது-உமாதேவியார். சாய்ந்து-மெலிந்து, ஓடி
யெனலுமாம். அநங்கை-அநங்கனை, உருவிலியாகிய மன்மதனை,
‘பெருந்திறத்து அநங்கனை அநங்கமா விழித்தும் பெருமைபோலும்”
(ப.349 பா.9) ‘மாய்ந்தன தீவினை. . . . அநங்கைக் காய்ந்தபிரான்
கண்டியூர் எம்பிரான்’ (தி.4 பா.93 ப.9). அநங்கனை என்பது அநங்கை
எனக் குறைந்தது போலும்.

     6. பொ-ரை:மாதொரு கூறனும், நிலையான வேதங்களை
ஓதுபவனும், அழகிய கையில் வெள்ளியதொரு தலையோட்டை
ஏந்தியவனும், ஆடும் பாம்பினைப் பூண்டு மகிழ்ந்தவனும், முடியில்
திங்கள், பாம்பு, கங்கை ஆகியவற்றைச் சூடியவனும் ஆகிய சிவபெருமான்
மேவி உறையும் கோயில் கைச்சினம்.

     கு-ரை:அங்கையோர் வெண்டலையான்-பிரமகபாலத்தை ஏந்திய
கையன். பூண்ட அரவம்-அணிந்த பாம்பு. முறையே திருமேனியிலும்
திருமுடியிலும் இருத்தல்பற்றி ஆதலின் கூறியது கூறலன்று-. (ப.155 பா.7
பார்க்க).

     7. பொ-ரை:வரிகளை உடைய பாம்பினை நாணாகவும், பெரிய
மலையை வில்லாகவும் கொண்டு எரிபொருந்திய கணையால் முப்புரங்களை
எய்து அழித்து மகிழ்ந்த எமது பெருமானும், நெற்