1958.
|
மண்ணினைமுன்
சென்றிரந்த
மாலும் மலரவனும்
எண்ணறியா வண்ண
மெரியுருவ மாயபிரான்
பண்ணிசையா லேத்தப்
படுவான்றன் னெற்றியின்மேல்
கண்ணுடையான் மேவியுறை
கோயில் கைச்சினமே. 9 |
|
*
* * * * * * * 10 |
1959.
|
தண்வயல்சூழ்
காழித்
தமிழ்ஞான சம்பந்தன்
கண்ணுதலான் மேவியுறை
கோயில் கைச்சினத்தைப்
பண்ணிசையா லேத்திப்
பயின்ற விவைவல்லார்
விண்ணவரா யோங்கி
வியனுலகம் ஆள்வாரே. 11
|
திருச்சிற்றம்பலம்
9.
பொ-ரை: மாவலியிடம் மூன்றடி மண் இரந்த திருமாலும்,
தாமரைமலர் மேல் உறையும் நான்முகனும் எண்ணவும் இயலாதவாறு
எரியுருவாய் நீண்ட பிரானும், அடியவர்களால் பண்ணிசையோடு
ஏத்தப்படுபவனும், நெற்றிக் கண்ணனும் ஆகிய சிவபிரான் மேவி உறையும்
கோயில் கைச்சினம். கு-ரை: இரந்த-மாவலியினிடத்து யாசித்த. எண்-
எண்ணம். பண்ணிசையால் ஏத்தப்படுவான், ஏழிசையாய் இசைப் பயனாய்
விளங்குதல் பற்றியது.
10.
* * * * * * * *
11.
பொ-ரை:குளிர்ந்த
வயல்களால் சூழப்பட்ட காழிப்பதியில்
தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன் நுதல் விழிநாட்டத்து இறையோன
|