பக்கம் எண் :

58

     3. ‘கானயங்கிய தண்கழி’ (பதி.140. பா.3.) என்ற விடத்து அயங்குதல்
அசங்குதல் என்றதன் மரூஉவாகக் கொண்டுரைத்தலுமாம் என்றும்,

     4. ‘விண்ணினிற் பிறை செஞ்சடைவைத்த வியப்பதே’ (பதி.140. பா.5.)
என்றவிடத்துப் ‘பிறை-பிறத்தலுடையது’ என்றும்.

     5. ‘இப்பிறை என்றதன் காரணத்தையே ‘விண்ணினாலான பிறை’
(பதி.143 பா.7.) என்றவிடத்து நினைவூட்டியும்,

     6. ‘தெங்குதுங்கப் பொழிற்செல்வம் மல்கும் திருச்சிக்கலுள்’
(பதி.144. பா.5) என்றவிடத்து, ‘தெங்கு-தென்கு-தென்னை என்பதால் அதன்
தொல்லுரு விளங்கும்’ என்றும்,

     7. இப்பதிகத்தேயே பா. 10-இல் ‘கட்டமண் கழுக்கள் சொல்லினைக்
கருதாது’ என்றவிடத்து, ‘அமண்-சமண்; க்ஷமண் என்பதன் திரிபு’ என்றும்,

     8. மழபாடி மழுவாடி என்பதன் மரூஉ என்றும் (பதி.145. பா.1 உரை)

     9. ‘பெம்மானைப் பேயுடன் ஆடல் புரிந்தானை’ (பதி.14.பா.2)
என்றவிடத்து, ‘மருமகன்-மருமான்’ என்றானது போலப் பெருமகன்
பெருமான் என மருவிற்று’ என்றும்,

     10. ‘இனிதனை ஏத்துவர் ஏதமிலாதாரே’ (பதி.150. பா.3.) என்றவிடத்து,
‘இனிது+அன்+ஐ இன்புருவானவனை’ என்றும்.

     11. ‘தாரானே தாமரைமேல் அயன்றான் தொழும்’ (பதி.151.பா.1.)
என்றவிடத்து ‘அயன்-அஜன்; தோன்றாதவன் என்பது அடிச்சொற்பொருள்’
என்றும்,

     12. ‘அழுமாறு வல்லார் அழுந்தை மறையோர்’ (பதி.156. பா.1)
என்றவிடத்து, ‘அழுந்தை என்பது அழுந்தூர் என்பதன் மரூஉ. இது புலவர்
செய்துகொள்ளும் மரூஉச் சொற்களுள் ஒன்று. புலியூர்-புலிசை,
மறைக்காடு-மறைசை, தொட்டிக்கலை-கலைசை, மறையூர் (திருவோத்தூர்)
மறைசை என்பவை வழங்கி மருவாதன ஆயினும் புலவர் வழக்கில் உள’
என்றும்,