1963.
|
கோலத்தார்
கொன்றையான்
கொல்புலித்தோ லாடையான்
நீலத்தார் கண்டத்தான்
நெற்றியோர் கண்ணினான்
ஞாலத்தார் சென்றேத்தும்
நாலூர் மயானத்தில்
சூலத்தா னென்பார்பாற்
சூழாவாந் தொல்வினையே. 4 |
1964.
|
கறையார்
மணிமிடற்றான்
காபாலி கட்டங்கன்
பிறையார் வளர்சடையான்
பெண்பாக னண்பாய
நறையார் பொழில்புடைசூழ்
நாலூர் மயானத்தெம்
இறையானென் றேத்துவார்க்
கெய்துமா மின்பமே. 5 |
4. பொ-ரை:அழகால்
நிறைந்த கொன்றைமாலையைச் சூடியவன்,
கொல்லும் புலியினது தோலை ஆடையாக உடுத்தவன், நீலநிறம்
பொருந்திய கண்டத்தினன். நெற்றிக்கண்ணன், உலகோர் சென்று
பரவிப்புகழும் நாலூர் மயானத்தில் விளங்கும் சூலத்தினன் என்பாரைத்
தொல்வினை சூழா.
கு-ரை:கோலத்து
ஆர்-அழகால் நிறைந்த. நீலத்து ஆர்-நீலத்தைப்
பொருந்திய. தொல்வினை-சஞ்சிதம். வினை சூழாவாம் என்க.
5. பொ-ரை:விடக்கறை
பொருந்திய நீலமணி போன்ற
மிடற்றினன். கையில் கபாலம் ஏந்தியவன். மழுஏந்தியவன். பிறை
வளரும் சடைமுடியினன். தன்பால் நட்புக்கொண்ட பெண்பாகன்.
தேன் பொருந்திய பொழில்கள் புடையே சூழ்ந்துள்ள நாலூர் மயானத்து
இறைவன் என்று அவனை ஏத்துபவர்க்கு இன்பம் வந்துறும். கு-ரை:
கறை-விஷக்கறை. மணி - நீலமணியை ஒக்கும். மிடறு-திருக்கழுத்து.
கட்டங்கன்-மழுவேந்தியவர். பெண்பாகன்-
|