|
நாலோடு
மாறங்கம்
நாலூர் மயானத்தெம்
பாலோடு நெய்யாடி
பாதம் பணிவோமே. 9 |
1969.
|
துன்பாய
மாசார்
துவராய போர்வையார்
புன்பேச்சுக் கேளாதே
புண்ணியனை நண்ணுமின்கள்
நண்பாற் சிவாயவெனா
நாலூர் மயானத்தே
இன்பா யிருந்தானை
யேத்துவார்க் கின்பமே. 10 |
மயானத்துப் பாலும்
நெய்யும் ஆடி மகிழ்பவனும் ஆய எம்பெருமானின்
பாதங்களைப் பணிவோம்.
கு-ரை:
நேட-தேட. நாலுவேதம் ஆறு அங்கம். பாலோடு நெய்-
பாலும் நெய்யும்.
10.
பொ-ரை: துன்பமாகிய அழுக்குடையவர்களும், பழுப்பாகிய
போர்வையை அணிந்தவர்களுமான சமணபௌத்தர்களின் பொருளற்ற
பேச்சுக்களைக் கேளாது புண்ணியத்தின் வடிவாய் விளங்கும் பெருமானை
நட்போடு சிவாய என்னும் மந்திரத்தைக் கூறி்க்கொண்டு நண்ணுங்கள்.
அப்பெருமான் நாலூர் மயானத்தில் இன்பவடிவினனாய் இருந்தருளுகின்றான்.
அவனை ஏத்துவார்க்கு இன்பம் விளையும்.
கு-ரை:
துன்பு ஆய-துன்பமாகிய. மாசு-அழுக்கு. ஆர்-நிறைந்த.
துவர் ஆய-பழுப்பாகிய. புன் பேச்சு-பொருளின்மையால் புல்லிய
பிதற்றுரைகள். புண்ணியனை-சிவபுண்ணிய சொரூபனை, புண்ணியனைப்
பூசித்த புண்ணியத்தினாலே (சிவஞானசித்தியார். சூ-8) நண்பு-செறிவு.
யோகம்- நட்பும் ஆம். இதிற்குறித்த திருவைந்தெழுத்து அதிசூக்கும
(காரண) பஞ்சாட்சரம். விண்ணினார் பணிந்தேத்த வியப்புறும்,
மண்ணினார் மறவாது சிவாய வென்று, எண்ணினார்க்கு இடமா
எழில்வானகம், பண்ணினாவர் பாலைத் துறையரே (தி.5 ப.51 பா.6)
இன்பு - பேரின்பம்.
|