பக்கம் எண் :

598

1986.







வேலைமலி தண்கானல்
     வெண்காட்டான் றிருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால்
     வழிபடுநன் மறையவன்றன்
மேலடர்வெங் காலனுயிர்
     விண்டபினை நமன் றூதர்
ஆலமிடற் றானடியா
     ரென்றடர வஞ்சுவரே.            5
1987.







தண்மதியும் வெய்யரவுந்
     தாங்கினான் சடையினுடன்
ஒண்மதிய நுதலுமையோர்
     கூறுகந்தா னுறைகோயில்
பண்மொழியால் அவன்நாமம்
     பலவோதப் பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணைமேல்
     வீற்றிருக்கும் வெண்காடே.        6


     5. பொ-ரை: கடல்நீர் நிரம்பிய குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த
வெண்காட்டு இறைவன் திருவடிகளை மாலைகளாலும் நிறைந்த
வளமையான சந்தனத்தாலும் வழிபட்ட மறையவராகிய சுவேதகேதுவின்
உயிரைக் கவரவந்த இயமனை அச்சிவன் உதைத்து அழித்ததால் அந்த
இயமனுடைய தூதர்கள் சிவபிரான் அடியவர் என்றால் அஞ்சி விலகுவர்.

     கு-ரை: வேலை-கடல். கானல்-கடற்கரைச்சோலை. காலன்
மாய்ந்ததால், தூதர் சிவனடியாரிடத்தில் அச்சமுற்றனர். இதிற்குறித்தது
திருவெண்காட்டுத் தலத்தில் நிகழ்ந்த சுவேத கேது முனிவர் வரலாறு,
(தி.2ப.61பா.7) இதனை மார்க்கண்டேய முனிவர் வரலாறு என்றும்
கூறுகின்றனர்.

     6. பொ-ரை: தனது சடைமுடியோடு தண்மதியையும் வெய்ய
அரவையும் தாங்கியவனும் ஒளி பொருந்திய மதி போன்ற நுதலை உடைய
உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரான்,
உறையும் கோயில், பசிய கிளிகள் இனிய குரலால்