பக்கம் எண் :

621

2016.







தோளின் மேலொளி நீறு தாங்கிய
     தொண்டர் வந்தடி போற்ற மிண்டிய
தாளினார் வளருந்
     தவமல்கு திருக்களருள்
வேளி னேர்விச யற்க ருள்புரி
     வித்த காவிரும் பும்ம டியாரை
ஆளுகந் தவனே
     அடைந்தார்க் கருளாயே.          5
2017.



பாட வல்லநன் மைந்த ரோடு
     பனிம லர்பல கொண்டு போற்றிசெய்
சேடர்வாழ் பொழில்சூழ்
     செழுமாடத் திருக்களருள்


     2. பொ-ரை: தோளின்மேல் ஒளிநீறு பூசிய தொண்டர்கள்
அடிபோற்றப் பெருமிதம் கொண்ட திருவடி உடையவனாய்த்
திருக்களருள் எழுந்தருளியவனே! முருகவேட்கு நிகரான அருச்சுனனுக்கு
அருள் புரிந்த வித்தகனே! தன்னை விரும்பும் அடியவரை ஆளாகக்
கொண்டு உகந்தவனே! உன்னை அடைந்த அன்பர்க்கு அருள் புரிவாயாக.

     கு-ரை: தோளின். . . . நீறு-‘திரள் தோள்மேல் நீறு நின்றது
கண்டனை ஆயினும் நெக்கிலை’ (திருவாசகம், திருச்சதகம், 33)
அங்குச் சிவபிரான் தோள். இங்குச் சிவதொண்டர் தோள், ‘சாந்தம்
ஈதென்று எம்பெருமான் அணிந்த நீறுகொண்டார் இடர்களையாய்
நெடுங்களமேயவனே’ என்றதால், உடையானுக்கு ஏற்றது அடியார்க்கும்
ஆதல் அறிக.

     மிண்டிய-நெருங்கிய. தாளினார் - திருவடியுடைய சிவபிரான்.
வேளின் நேர்-முருகனைப் போன்ற. விசயன்-அருச்சுனன். சிவவேடனிடம்
தோற்றுச் சயம் நீங்கியவன். விசயன்-மேலான வெற்றியன் என்பது,
அவன்பெற்ற பிறவெற்றிகளைக் குறித்தது. வித்தகா-ஞான வடிவா!
ஆள்-அடிமையாக. உகந்தவனே-விரும்பிக்கொண்ட (ஆண்ட) வனே!

     3. பொ-ரை: பாடவல்ல நன்மக்களோடு நறுமலர்கொண்டு போற்றும்
உயர்ந்தோர் வாழும் பொழில் சூழ்ந்த செழுமையான மாட