2042.
|
நீரி
னார்வரை கோலி மால்கடல்
நீடி யபொழில் சூழ்ந்து வைகலும்
பாரினார் பிரியாப்
புறவார் பனங்காட்டூர்க்
காரி னார்மலர்க் கொன்றை தாங்கு
கடவு ளென்றுகை கூப்பி நாடொறும்
சீரினால் வணங்குந்
திறத்தார்க் கருளாயே. 6 |
கு-ரை:
செங்கயல் சேல் இரண்டும் போர்செய்ய மலரும்,
தேனினத்தொடு மலரும் என்றியைக்க. சிறுமை+யாழ்-சீறியாழ். பேரி யாழ்
வேறுண்டு. இப்பிரிவால் பாணரும் சிறுபாணர் பெரும்பாணர்
என்றிருவகைப்படுவர்.
தேன்-வண்டு,
யாழ்முரல்-யாழின் ஒலி போல முரலு (ஒலித்)தல்.
கேண்மையாள்-உமாதேவியார். கேள்+மை-கேளாந் தன்மை. உரிமை, உன்
பெருந்தேவி என்னும் உரிமை, மறி-கன்று. ஆடல் (ஆள்+தல்) ஆளுதல்,
ஆடலன்-ஆளுதலையுடையவனே. மான் கன்றேந்திய அழகியகையன்
என்றவாறு. அகங்கையுமாம். அங்கையிற்படையாய் (ப.187. பா.5)
6. பொ-ரை:
பெரிய கடலை எல்லையாகக்கோலி நீண்ட பொழில்
சூழ்ந்து விளங்கும் இவ்வுலகில் விளங்கும் அடியவர் நாள்தோறும் பிரியாது
வணங்கும் புறவார் பனங்காட்டூரில் கார்காலத்தே மலரும் கொன்றையை
அணிந்தகடவுளே! என்று கை குவித்து நாள்தோறும் சிறப்போடு வழிபடும்
அடியவர்கட்கு அருள் புரிவாயாக.
கு-ரை:
நீரின் ஆர் வரை கோலி மால் கடல் நீடிய பொழில்-நீரால்
(அரணாகப்) பொருந்திய எல்லையை வகுத்துப், பெரிய கடல் நெடுகப்பரவிய
சோலை, சூழ்ந்து பிரியா ஊர் என்க. சூழ்தல் சோலையின் வினை, பிரியாமை
பாரினாரது.
பாரினார்-மண்ணுலகத்தார்.
வைகலும் பிரியா-நாடோறும் நீங்காது
வழிபடும். காரின் ஆர்மலர்க் கொன்றை:- கண்ணிகார்நறுங் கொன்றை
என்றவாறு, கார்காலத்தில் கொன்றை மிகுதியாகப் பூப்பதுணர்த்திற்று.
கூப்பி-குவித்து கூம்பி-தன்வினை, கூப்பி-பிறவினை.
|