பதிக
வரலாறு:
137-ஆவது பதிகத்
தலைப்பிற் பார்க்க.
பண்:
காந்தாரம்
ப.தொ.எண்: 190
பதிக
எண்: 54
திருச்சிற்றம்பலம்
2048.
|
உருவார்ந்த
மெல்லியலோர்
பாகமுடையீர் அடைவோர்க்குக்
கருவார்ந்த வானுலகங்
காட்டிக்கொடுத்தல் கருத்தானீர்
பொருவார்ந்த தெண்கடலொண்
சங்கந்திளைக்கும் பூம்புகலித்
திருவார்ந்த கோயிலே
கோயிலாகத் திகழ்ந்தீரே. 1 |
1. பொ-ரை:
அழகிய உமையம்மையை ஒரு பாகத்தே கொண்டவரே!
தம்மை அடைவோர்க்கு அருள்நிறைந்த வானுலகை வழங்கும் கருத்தால் நீர்
கரையோடு பொரும் தெண்கடற்சங்கம் வந்து மகிழும் பூம்புகலியில் உள்ள
அழகிய கோயிலை உமது இருப்பிடமாகக் கொண்டீர் போலும்.
கு-ரை:
உரு-திருமேனிப்பொலிவு. மெல்லியல்-உமாதேவியார். கரு-
உருவமைந்த மாநகர்க்குக் கருவமைந்த மாடம்போல என்றதில் உள்ள
பொருளே ஈண்டுங் கொள்ளப்படினும், அங்குப் பொருட்கருவும் இங்கு
அருட்கருவும் என்று வேறுபட்டு நிற்கும்.
பொருஆர்ந்த-மோதுதல்
நிறைந்த. புகலி-சீகாழி. கோயிலாக
-தலைமையில்லமாக. கோ-தலைவன், தலைமை தலைவனில்லம் இரண்டன்
வேறுபாடு உணர்க.
|