2051.
|
கையிலார்ந்த
வெண்மழுவொன்
றுடையீர்கடிய கரியின்றோல்
மயிலார்ந்த சாயன்மட
மங்கைவெருவ மெய்போர்த்தீர்
பயிலார்ந்த வேதியர்கள்
பதியாய்விளங்கும் பைம்புகலி
எயிலார்ந்த கோயிலே
கோயிலாக விசைந்தீரே. 4 |
2052.
|
நாவார்ந்த
பாடலீர்
ஆடலரவம் அரைக்கார்த்தீர்
பாவார்ந்த பல்பொருளின்
பயன்களானீ ரயன்பேணும்
பூவார்ந்த பொய்கைகளும்
வயலுஞ்சூழ்ந்த பொழிற்புகலித்
தேவார்ந்த கோயிலே
கோயிலாகத் திகழ்ந்தீரே. 5 |
4. பொ-ரை:
கையில் வெண்மழு ஒன்றை உடையவரே! மயில்
போன்ற சாயலை உடைய உமையம்மை அஞ்ச யானையின் தோலை
மெய்யில் போர்த்தவரே! மறை பயின்ற வேதியர்களின் பதியாய் விளங்கும்
அழகிய புகலியுள் மதில்களால் சூழப்பட்ட கோயிலை உம் இருப்பிடமாகக்
கொண்டுள்ளீர்.
கு-ரை:
கையில் என்பதில் ஐகாரம் ஒரு மாத்திரை யொலிப்பது
சங்கக் கயனும் (தி. ப. 36 பா.9). கரி-யானை, ஆர்ந்த-ஒத்த, வெருவா-
(அஞ்சிவாய்) வெருவுதலடைய, தோல் போர்த்தீர் என்க. பயில்-(மறைப்)
பயிற்சி, முதனிலைத் தொழிற்பெயர். எயில்-மதில்.
5. பொ-ரை:
நாவிற்பொருந்திய, பாடலைப் பாடுகின்றவரே!
ஆடும்பாம்பை இடையிற்கட்டியவரே! பாடலில் பொருந்திய பொருளும்
பயனும் ஆனவரே! நான்முகனால் விரும்பப்பெறும் பூக்கள் நிறைந்த
பொய்கைகளும் வயல்களும் சூழ்ந்துள்ள பொழில் சூழ்ந்த புகலியில்
தெய்வத்தன்மை பொருந்திய கோயிலையே உம் கோயிலாகக் கொண்டு
திகழ்கின்றீர்.
கு.ரை:
பாடல்-வேதகீதம். அரைக்கு-திருவிடையில். ஆர்த்
|