பக்கம் எண் :

647

2053.







மண்ணார்ந்த மண்முழவந்
     ததும்பமலையான் மகளென்னும்
பெண்ணார்ந்த மெய்மகிழப்
     பேணியெரிகொண் டாடினீர்
விண்ணார்ந்த மதியமிடை
     மாடத்தாரும் வியன்புகலிக்
கண்ணார்ந்த கோயிலே
     கோயிலாகக் கலந்தீரே.         6
2054.



களிபுல்கு வல்லவுண
     ரூர்மூன்றெரியக் கணைதொட்டீர்
அளிபுல்கு பூமுடியீர்
     அமரரேத்த வருள்செய்தீர்


தீர்-கட்டினீர். பாவும் அதன் பொருளும் அதன் பயனும் ஆயினீர்.
அயன் பேணும் புகலி-பிரமன் பூசித்த சீகாழி; பிரமபுரம். பூ-தாமரை மலர்.
‘பூவினுக்கருங்கலம்’, ‘பொங்கு தாமரை’ பூவிற்குத் தாமரையே. தே-பிரளய
காலத்திலும் அழியாத தெய்வத்தன்மை.

     6. பொ-ரை மார்ச்சனை ஊட்டப்பட்ட (முகப்பு-வலந்தரை)
மண்ணாலான (கொட்டு என்பவற்றோடு கூடிய) முழவம் (மிருதங்கம்)
ஒலிக்க-இமவான் மகளாகிய பார்வதி தேவி திருமேனியிற் பொருந்தி
விளங்க, விரும்பிக் கையில் அனல் கொண்டு ஆடுபவரே! வானத்திற்
பொருந்திய மதிமிடையும் மாடங்களைக் கொண்டுள்ள விரிந்த புகலியில்
கண்களுக்கு மகிழ்வு தரும் கோயிலை உம் கோயிலாகக் கொண்டு
கலந்துள்ளீர்.

     கு.ரை: மண்-மார்ச்சனை. முழவம்-மத்தளம். (மிருதங்கம்) ததும்ப
மகிழ ஆடினீர் என்க. மலையான் மகள் என்னும் பெண்-இமாசல ராசன்
குமாரி எனப்படும் உமாதேவியார், ‘நாமகள்’ ‘திரு மகள்’ ‘மலைமகள்’
‘மலைப்பெண்’ என்புழிப் போலத் தேவி என்ற பொருளைக் குறித்தலறிக.
மெய்-திருமேனி. மகிழ-பூரிக்க, ‘மெய் மகிழ’ என்றது அரிய பிரயோகம்.
மிடை-நெருங்கிய. சந்திர மண்டலம் அளவும் ஓங்கிய மாடம் என்றவாறு,
‘வண்கொண்டல் விட்டு மதி முட்டுவன மாடம்’. வியன்-அகலம். புகலிக்கண்
ஆர்ந்த சீகாழியில் பொருந்திய.

     7. பொ-ரை: களிப்புமிக்க வலிய அவுணர்களின் மூன்று ஊர்கள்
எரியுமாறு கணை எய்தவரே! வண்டுகள் சூழும் மலர்முடியை உடைய