பக்கம் எண் :

652

2062.







வேடஞ்சூழ் கொள்கையீர்
     வேண்டிநீண்ட வெண்டிங்கள்
ஓடஞ்சூழ் கங்கையும்
     உச்சிவைத்தீர் தலைச்சங்கைக்
கூடஞ்சூழ் மண்டபமுங்
     குலாயவாசற் கொடித்தோன்றும்
மாடஞ்சூழ் கோயிலே
     கோயிலாக மகிழ்ந்தீரே.          4
2063.







சூலஞ்சேர் கையினீர்
     சுண்ணவெண்ணீ றாடலீர்
நீலஞ்சேர் கண்டத்தீர்
     நீண்டசடைமே னீரேற்றீர்
ஆலஞ்சேர் தண்கான
     லன்னமன்னுந் தலைச்சங்கைக்
கோலஞ்சேர் கோயிலே
     கோயிலாகக் கொண்டீரே.        5


     கு-ரை: சீர்-கனம், மேன்மை. பாடல்-வேதப்பாடல், சாமகானம்,
ஏறு-எருது. ஊர்தி-வாகனம். சிவபூசை செய்வார்க்கு இன்றியமையாத
பொருள் நீரும் பூவும் என்பது குறிக்கப்பட்டது. தார்-மாலை, தார்கொண்ட
மார்பர். நூல் (பூணு நூல்) அணிந்த மார்பர் என்க. தக்கோர்-‘அந்தணாளர்’.
(பா.8) ஏர்-அழகு.

     4. பொ-ரை: தாமே விரும்பிப் பற்பல வடிவங்களோடு வரும்
இயல்பினரே! நீண்ட வெண்டிங்களாகிய ஓடம் செல்லும் கங்கையாற்றை
உச்சியில் வைத்துள்ளவரே! நீர், தலைச் சங்கையில் கூடம், மண்டபம்
வாயிலில் கொடி தோன்றும் மாடம் ஆகிய வீடுகள் சூழ்ந்த கோயிலை
இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.

     கு-ரை: வேடம்-‘பலபல வேடம் ஆகும் பரன்’, உச்சியிலுள்ள
கங்கையில் திங்கள் ஓடம்போல் உளது. கூடம், மண்டபம், மாடம் என்பன
இட விசேடங்கள், வாசலில் கொடி தோன்றும் மாடம் என்க.

     5. பொ-ரை: சூலம் ஏந்திய கையை உடையவரே! பொடியாகிய
வெண்ணீற்றைப்பூசி ஆடுபவரே! நீலகண்டரே! நீண்ட சடைமேல் கங்