2064.
|
நிலிநீரொ
டாகாச
மனல்காலாகி நின்றைந்து
புலநீர்மை புறங்கண்டார்
பொக்கஞ்செய்யார் போற்றோவார்
சலநீத ரல்லாதார்
தக்கோர்வாழுந் தலைச்சங்கை
நலநீர கோயிலே
கோயிலாக நயந்தீரே. 6 |
2065.
|
அடிபுல்கு
பைங்கழல்கள்
ஆர்ப்பப்பேர்ந்தோர் அனலேந்திக்
கொடிபுல்கு மென்சாயல்
உமையோர் பாகங்கூடினீர் |
கையை ஏற்றுள்ளவரே!
நீர், வளம் சேர்ந்த குளிர்ந்த சோலைகளில்
அன்னங்கள் பொருந்தி வாழும் தலைச் சங்கையில் உள்ள அழகிய
கோயிலை உமது கோயிலாகக் கொண்டுள்ளீர்.
கு.ரை:
சூலம்-மூவிலைவேல். சுண்ணம்-பொடியாகிய. ஆடலீர் -
மூழ்குதலுடையீர். நீராடல் போல் நீறாடல். நீர் - கங்கை. ஆலம்-நீர்.
மன்னும்-பொருந்தும். கோலம்-அழகு; வடிவமுமாம்.
6. பொ-ரை:
நிலம், நீர், ஆகாயம், அனல், காற்று ஆகிய
ஐம்பூத வடிவாய் நின்று ஐம்புலன்களை வென்று நிற்பவரே! பொய்யிலாரது
வழிபாட்டை ஏற்பவரே! நீர், வஞ்சகமும் இழிசெயல்களும் இல்லாத
தக்கோர் வாழும் தலைச் சங்கையில் அழகிய கோயிலை உமது கோயிலாகக்
கொண்டுள்ளீர்
கு-ரை:
நிலம் முதலிய ஐம்பெரும் பூதங்களாகி நின்றவன் இறைவன்.
அட்டமூர்த்தங்களுள் முதலைந்தும் இவையே. ஐந்துபுல நீர்மைபுறம்
கண்டார்-ஐம்புலன்களை வென்றவர். பொக்கம்-பொய். போற்று-துதி.
ஓவார்-நீங்கார். சலம்-மாறுபாடு; வஞ்சகம். நீதம்-இழிஞர். தக்கார்
(ப.176,
பா.10) நலநீர-அழகிய தன்மையுடைய.
7. பொ-ரை:
திருவடியிற் பொருந்திய கழல் ஆர்க்க அனல் ஏந்தி
நடனம் ஆடி, கொடி போன்ற மென்மையான சாயலை உடைய உமை
|