பதிக
வரலாறு:
பரவுவார் பிணிதீர்க்கும்
நலத்தை உடைய திருவிடைமருதூர்
மகாலிங்கேசரை வணங்கிப் பாடிய பலபதிகங்களுள் இதுவும் ஒன்று;
(திருஞான - புராணம்-412)
பண்:
காந்தாரம்
ப.தொ.எண்: 192
பதிக எண்: 56
திருச்சிற்றம்பலம்
2070.
|
பொங்குநூன்
மார்பினீர்
பூதப்படையீர் பூங்கங்கை
தங்குசெஞ் சடையினீர்
சாமவேத மோதினீர்
எங்குமெழிலார் மறையோர்கண்
முறையாலேத்த விடைமருதில்
மங்குல்தோய் கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே. 1 |
2071.
|
நீரார்ந்த
செஞ்சடையீர்
நெற்றித்திருக்கண் நிகழ்வித்தீர்
போரார்ந்த வெண்மழுவொன்
றுடையீர் பூதம்பாடலீர் |
1. பொ-ரை:
திருமேனியில் விளங்கித் தோன்றும் பூணூல்
அணிந்தமார்பினரே! பூதப்படைகளை உடையவரே! அழகிய கங்கை
தங்கும் செஞ்சடையை உடையவரே! சாமவேதத்தைப் பாடுபவரே! நீர்
அழகிய மறைகளைக் கற்றுணர்ந்த மறையவர்; எல்லா இடங்களிலும்
முறையால் ஏத்த இடைமருதூரில் வானளாவிய கோயிலை உம்கோயிலாகக்
கொண்டு மகிழ்ந்துள்ளீர்.
கு.ரை:
படை-கணம். எழில்-அழகு. எங்கும் ஏத்த மகிழ்ந்தீர் என்க.
மேலும் இவ்வாறே கூட்டுக. முறையால்-வேதாகம விதிப்படி. மங்குல்-மேகம்.
2. பொ-ரை:
கங்கை ஆர்ந்த செஞ்சடையை உடையவரே! நெற்றியில்
அழகிய கண்ணைக் கொண்டுள்ளவரே! போர்க் கருவி
|