|
ஏரார்ந்த
மேகலையாள்
பாகங்கொண்டீ ரிடைமருதில்
சீரார்ந்த கோயிலே
கோயிலாகச் சேர்ந்தீரே. 2 |
2072.
|
அழன்மல்கு
மங்கையில்
ஏந்திப்பூத மவைபாடச்
சுழன்மல்கு மாடலீர்
சுடுகாடல்லாற் கருதாதீர்
எழின்மல்கு நான்மறையோர்
முறையாலேத்த விடைமருதில்
பொழில்மல்கு கோயிலே
கோயிலாகப் பொலிந்தீரே. 3 |
யாகிய வெண்மழு ஒன்றை
ஏந்தியவரே! பூதங்கள் பாடுதலை உடையவரே!
அழகிய மேகலை அணிந்த பார்வதி தேவியைப் பாகமாகக் கொண்டவரே!
நீர், இடைமருதில் உள்ள சிறப்புமிக்க கோயிலை உம் கோயிலாகக் கொண்டு
எழுந்தருளியுள்ளீர்.
கு.ரை:
நிகழ்வித்தீர்-விளங்கச் செய்தீர். பூதம் பாடலீர்-பூதங்கள்
பாடுதலை உடையீர்.
ஏர்-அழகு.
சீர் சிறப்பு, மேன்மை.
3. பொ-ரை:
நிறைந்த தீயை, அழகிய கையில் ஏந்திப் பூதங்கள்
பாடச் சுழன்று ஆடுபவரே! சுடுகாடல்லால் பிறவிடத்தை நினையாதவரே!
நீர், அழகிய நான் மறையோர் முறையால் ஏத்தி வழிபட இடைமருதில்
உள்ள சோலைகள் சூழ்ந்த கோயிலை உம் இருப்பிடமாகக் கொண்டு
பொலிந்துள்ளீர்.
கு-ரை:
அழல்-தீ. சுழல் மல்கும் ஆடலீர்-சூழ்தல் நிறைந்த
திருக்கூத்தை உடையீர்.
பொழில்-பூஞ்சோலை.
பொலிந்தீர்-பொன்போல் விளங்கினீர்.
|