2073.
|
பொல்லாப்
படுதலையொன்
றேந்திப்புறங்காட் டாடலீர்
வில்லாற் புரமூன்றும்
எரித்தீர் விடையார் கொடியினீர்
எல்லாக் கணங்களும்
முறையாலேத்த விடைமருதில்
செல்வாய கோயிலே
கோயிலாகச் சேர்ந்தீரே. 4 |
2074.
|
வருந்திய
மாதவத்தோர்
வானோரேனோர் வந்தீண்டிப்
பொருந்திய தைப்பூச
மாடியுலகம் பொலிவெய்தத்
திருந்திய நான்மறையோர்
சீராலேத்த விடைமருதில்
பொருந்திய கோயிலே
கோயிலாகப் புக்கீரே. 5 |
4. பொ-ரை:
பொலிவற்ற, தசைவற்றிய தலையோட்டை ஏந்திச்
சுடுகாட்டில் ஆடுபவரே! வில்லால் முப்புரங்களை எரித்தவரே!
விடைக்கொடி உடையவரே! நீர், எல்லாக்கணத்தினரும் முறையால் போற்ற
இடைமருதில் உள்ள செல்வம் ஆன கோயிலையே உம் இருப்பிடமாகக்
கொண்டுள்ளீர்.
கு.ரை:
பொல்லா-பொலிவில்லாத. விடையார் கொடி-
எருதுருவெழுதியகொடி. ஏர்காட்டும் கோதிலா ஏறாங்கொடி (திருவா-
திருத்தசா - 10). எல்லாக் கணங்களும்-சிவகணம் முதலிய எல்லாமும்.
செல்வு ஆய-செல்வமாகிய, அம்விகுதி கெட்டது. செல்வாய செல்வம்
தருவாய் போற்றி, (அப்பர்) செல்வாய்த் திருவானாய் நீயே (அப்பர்
பதி.255 பா.3).
5. பொ-ரை:
பெருமானே! நீர், விரதங்களால் மெய்வருந்திய
மாதவத்தோர் வானவர் ஏனோர் வந்து கூடித் தைப்பூச நாளில்
காவிரியில் பொருந்தி நீராடி உலகவரோடு தாமும் மகிழுமாறும்
திருத்தமான நான்மறைவல்ல அந்தணர்கள் முறையால் ஏத்தவும்
|