பக்கம் எண் :

66

     “ஆதிரை, பரணி, ஆரல் ஆயில்யமுப்பூரம் கேட்டை” என்ற
சோதிடநூற் பாட்டை உதாரணமாகக் காட்டி விளக்குதலும், இப்பதிகத்து
இறுதித் திருப்பாடலில் கோள், நாள் என்பவற்றின் பொருளைத்
தெளிவுபடுத்தியிருத்தலும்,

     ஆசிரியரது இத்துறைப் புலமையை நன்கு விளக்கும்.

6. புதியன பொருள்கள்:

1.‘நாடி ஞானசம்பந்தன் செந்தமிழ் கொண்டிசை  பாடும் ஞானம்வல்லார் அடிசேர்வது ஞானமே’

(பதி.138-11) என்பதன் உரையில், ‘சைவமும் தமிழும் தழைத்தினிது ஓங்குக’
என்ற தொடரில் தமிழ் என்பது திருமுறைகளையே குறிக்கும் என்று
தெளிந்து எழுதுதலும்.

     2. செந்து என்பது ஒரு பெரும்பண் என்று எழுதுதலும் (பதி.139-10)

     3. இசை-வேதாகம முழக்கம்; புகழ் எனல் பொருந்தாது பதி. (140-10)
என்று வரைதலும்

     4. கலிகடந்த கையான் என்றது திருஞானசம்பந்தர் எரி ஓம்பும்
திருக்கையால் அளவற்றோரது வறுமை நீக்கிய உண்மையை உணர்த்தி
நின்றது என்று எழுதுதலும் (பதி.142-12)

     5. காலகாலர் என்பதற்கு இயமனுக்கும் கால முடிவைச் செய்பவர்
என்று எழுதுதலும் (பதி.143-2)

     6. மேற்கண்ட பாடலிலேயே ஞாலம் என்பது ‘தொங்குவது’ என்ற
காரணப் பொருளதாய் முன்னோரது பூகோள ககோள ஞானத்தை
உணர்த்துவது அறிக என எழுதுதலும்,

     7. பிறை-பிறத்தலுடையது எனப்பொருள் காண்டலும் (பதி.143-7)

     8. ஆனைந்துள் பால், தயிர், நெய், என்ற மூன்றே சைவாசாரியர்
கொண்டாடியன என நுண்பொருள் காணுதலும் (பதி.146.5.)