பக்கம் எண் :

67

     9. ஏத்தல்-இறைவன்புகழை எடுத்தோதுதல். எடுத்தலோசையே
தோத்திரங்களுக்கு உரியது என்று எழுதுதலும் (பதி.146-7)

     10. மாந்தர் மனிதரிற் சிறந்தார் எனப் பொருள் கோடலும் (பதி.147-6)

     11. ‘கந்தண்பூங் காழியூரான் கலிக்கோவையால் சந்தமே பாடவல்ல’
(பதி.148-11.) என்ற இடத்துக் கலிக்கோவை என்பதற்கு ஒலிமாலை எனவும்,
‘ஒண்கலியைப் பொன்றும் கவுணியன் அருளிய கோவையாகலின் கலியைத்
தீர்க்கும் கோவை எனலுமாம் எனவும், கலியுகத்துக்கோவை
கலிவிருத்தக்கோவை எனல் பொருந்துமேற் கொள்க எனவும் அழகுற
எழுதுதலும்.

     12. ‘இமையோர் தொழும் வேதனை (பதி.149-3.) என்புழி இமையோர்
தேவர் என்று பொருள் கூறல் சைவ நூல்களுக்குப் பொருந்தாது.
கண்ணிமைத்துக் காணாத யோகியர், விழித்தகண் குருடாத்திரிவீரர்
என்பதே உண்மைப் பொருள் என்று தெளிவுறுத்தலும்.

     13. ‘கண்ணனும் நான்முகனுங் காணா விண்ணினை என்புழி’
(பதி.150-9.) ‘விண் திருச்சிற்றம்பலம் என்று எழுதுதலும்.

     14. மரியார்-திருவடி வழிபாட்டால் பிறவி நீங்கியவர் (ஜீவன்முக்தர்)
என்று எழுதுதலும் (பதி.154-9.)

     15. ‘தடுமாறு, வல்லாய் தலைவா! மதியம்’ (பதி.157-7) என்ற இடத்துத்
‘தடுமாறு வல்லாய் உயிர்கள் உன்னை உணர்வதில் தடுமாறுதலைச்
செய்யவல்லவனே என்றும், இச்சொல்லைத் தட்டுமாறுதல் என்பதன்
மரூஉவாகக்கொண்டு அஃது ஈண்டுத் திருக்கூத்தைக் குறித்து நின்றது
எனலுமாம்’ எனப்புத்துரை காண்டலும்,

     16. ‘வண்டிரைமதிச்சடை’ என்புழி (பதி.165-2) புனலில் உள்ள வளம்
பற்றியதாகவும், அலையின் வளம் பற்றியதாகவும் ஈருரை காண்டலும்,

     17. ‘புடங்கருள் செய்தொன்றினை புறம்பயம் அமர்ந்தோய்’ என்புழி
(பதி.166-9) புடம்+கருள்+செய்து எனப்பிரி்த்து இருள் மறைக்கப்பட்டாற்போல
அறியாமையால் மறைக்கப்பட்டு என்று புள்+தங்க+அருள்செய்து என்றும்
பிரித்தும் இரு புதுப்பொருள்