காண்டலும்,
18. பருத்துருவதாகி
விண் அடைந்தவன் என்புழி (பதி.159-9)
பிரமன் ஒரு கற்பத்தில் கழுகாகி முடி தேடினான் என்ற திருமுறைப்
பேருண்மையைச் செவ்விய முறைநின்று ஆதாரம் காட்டித்
தெளிவுறுத்தலும்,
19. நல்லார்பயில்காழி
என்புழி (பதி.171-11) நல்லார் ஞானியர்
என்றுரைத்தலும்,
20. இது
நன்கு இறைவைத்து அருள்செய்க என்புழி. (பதி.173-1)
பின்வருவன வினாக்களாதலின் அவற்றிற்குச் செவ்வனிறையோ
இறைபயத்தலோ செய்க என்றருளினார் என்று புத்துரை காண்டலும்
இதற்குப் பிறர் இயையாது பொருள் உரைத்தார் என்பதும் இப்பொருள்
மிக்க மகிழ்ச்சி விளைவிப்பதும் ஈண்டு உணரத்தக்கன.
21. தேங்கனி
அரியதொரு சொல்வழக்கு என்றலும் (பதி.174-3)
22. ஏழைபங்காளன்
என்பதற்கு உமையொருபாகன் என்பதே
பொருள் என்றும், வறியர் பங்கை ஆள்பவன் என்று கூறுதல் மாபாதகம்
என்று எழுதுதலும்,
23. தள்ளாய
சம்பாதிஎன்புழி (பதி.179-1) தாழ்ந்த பறவைகள்
எனக்கருதித் தள்ளி விடத்தகாகதது என்றும், தள்ளுதல் ஆனஎனப்
பொருள் எழுதுதலும்,
24. பிச்சை
பிறர் பெய்யப் பின்சாரக் கோசாரக் என்புழி (பதி.
180-10) கோசார-தலைமை தன்னைப் பொருந்த என்றும், யானை சார
என்றும் sssபொருளெழுதுதலும்,
25. பெருஞ்சாந்தி
காணாதே போதியோ பூம்பாவாய் (பதி.183-10)
என்புழிப் பெருஞ்சாந்தி என்பது பவித்திரோற்சவமே; கும்பாபிடேகம்
அன்று என்று புதுப்பொருள் உரைத்தலும், 26.கொழுநற் றொழுதெழுவாள்
என்புழி (பதி.188-5) படுக்கையின் நின்று தொழுதுகொண்டே எழுதல்
செய்வாள் என்று
|