பக்கம் எண் :

662

2078.







மறைமல்கு நான்முகனு
     மாலுமறியா வண்ணத்தீர்
கறைமல்கு கண்டத்தீர்
     கபாலமேந்து கையினீர்
அறைமல்கு வண்டினங்க
     ளாலுஞ்சோலை யிடைமருதில்
நிறைமல்கு கோயிலே
     கோயிலாக நிகழ்ந்தீரே.       9
2079.







சின்போர்வைச் சாக்கியரும்
     மாசுசேருஞ் சமணரும்
துன்பாய கட்டுரைகள்
     சொல்லி யல்லல்தூற்றவே
இன்பாய வந்தணர்க
     ளேத்துமேர்கொ ளிடைமருதில்
அன்பாய கோயிதேல
     கோயிலாக வமர்ந்தீரே.       10


     9. பொ-ரை: வேதங்களை ஓதும் நான்முகனும் திருமாலும் அறிய
இயலாத தன்மையீர்! கறைக் கண்டத்தீர்! கபாலம் ஏந்தும் கையினை
உடையீர்! இசைமிழற்று வண்டுகள் பாடும் சோலைகள் சூழ்ந்த இடைமருதில்
உள்ள நிறைவான கோயிலை நும் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.

     கு.ரை: கறை-நஞ்சின் கறுப்பு. அறை-ஓசை. கபாலம்-பிரம்ம கபாலம்.
ஆலும்-ஒலிக்கும். நிறை-நிறையால் நினைபவர்’ நிகழ்ந்தீர்-விளங்கினீர்.

     10. பொ-ரை: பெருமானே! நீர், அற்பமான போர்வை அணிந்த
சாக்கியரும், அழுக்கு ஏறிய உடலினராகிய சமணரும் துன்பமயமான
கட்டுரைகள் சொல்லித்தூற்ற, இன்பம் கருதும் அந்தணர்கள் ஏத்தும்
அழகிய இடைமருதில் அன்பு வடிவான கோயிலையே நும் கோயிலாகக்
கொண்டுள்ளீர்.

     கு-ரை: சின் (போர்வை) - சின்மை, அற்பம். திரிபு, ‘நன்பொருள்’
என்பதிற் போல லகரம் னகரமாகத் திரிந்தது. துன்பு ஆய