பக்கம் எண் :

663

2080.







கல்லின் மணிமாடக்
     கழுமலத்தார் காவலவன்
நல்ல அருமறையான்
     நற்றமிழ் ஞானசம்பந்தன்
எல்லி யிடைமருதில்
     ஏத்துபாட லிவைபத்தும்
சொல்லு வார்க்குங்
     கேட்பார்க்குந் துயரம்இல்லையே.   11

                  திருச்சிற்றம்பலம்


கட்டுரைகள்-துன்பந்தருவனவாய கட்டிச் சொல்லியவை. அல்லல்-துன்பம்.
இன்பு-இன்பம். அன்பு ஆயகோ ‘அன்பே சிவம்’ அன்பிற் குரியதாகிய
கோயிலுமாம். அமர்தல்-விரும்பியிருத்தல்.

     11. பொ-ரை: கல்லால் இயன்ற அழகிய மாடவீடுகளைக் கொண்ட
கழுமலத்தார் தலைவனாகிய நன்மைதரும் அருமறைவல்ல நற்றமிழ்
ஞானசம்பந்தன் இராப்போதில் இடைமருதை அடைந்து ஏத்திய பாடல்
இவை பத்தையும் சொல்லுவார்க்கும் கேட்பார்க்கும் துயரம் இல்லை.

     கு-ரை: கல்லின் மணிமாடம்-கல்லாற் கட்டப்பட்ட அழகிய
மாடங்களையுடைய (கழுமலம்). கழுமலத்தார்-சீகாழியில் உறையும்
சிவமறையோர். காவலவன்-அரசன்; வேந்தன். ‘சண்பையர் வேந்தன்’
எல்லி-இரவு. துயரம்-பிறப்பு இறப்புக்கள்.

திருஞானசம்பந்தர் புராணம்

பரவுறுசெந் தமிழ்ப்பதிகம் பாடிஅமர்ந் தப்பதியில்
விரவுவார் திருப்பதிகம் பலபாடி வெண்மதியோ(டு)
அரவுசடைக் கணிந்தவர்தந் தாள்போற்றி ஆர்வத்தால்
உரவுதிருத் தொண்டருடன் பணிந்தேத்தி உறையுநாள்.

-சேக்கிழார்.