பதிக
வரலாறு:
முதல் திருமுறை
பதிகம் 86 இன் பதிக வரலாறு காண்க.
பண்:
காந்தாரம்
ப.தொ.எண்: 193:
பதி எண்: 57
திருச்சிற்றம்பலம்
2081.
|
பெண்ணமருந்
திருமேனி
யுடையீர் பிறங்குசடைதாழப்
பண்ணமரும் நான்மறையே
பாடியாடல் பயில்கின்றீர்
திண்ணமரும் பைம்பொழிலும்
வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்
மண்ணமருங் கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே. 1 |
2082.
|
அலைமல்கு
தண்புனலும்
பிறையுஞ்சூடி யங்கையில்
கொலைமல்கு வெண்மழுவு
மனலுமேந்துங் கொள்கையீர் |
1. பொ-ரை:
உமையம்மை பொருந்திய திருமேனியை
உடையவரே! விளங்கும் சடைகள் தாழ்ந்து தொங்க இசை அமைதிஉடைய
நான்மறைகளைப்பாடி ஆடல்புரிகின்றவரே! நீர் உறுதியான பசிய
பொழில்களும் வயல்களும் சூழ்ந்த திருநல்லூரில் மண்ணுலக மக்களால்
விரும்பப்படும் கோயிலையே நும் கோயிலாகக் கொண்டுள்ளீர்.
கு.ரை:
பெண்ணமருந் திருமேனி உடையீர்-மங்கை பங்கரே. பிறங்கு
-விளங்குகின்ற. பண்-இசை. திண்-உறுதி. மண் அமரு-மண்ணோர் விரும்பும்.
நிலத்தில் பொருந்தும் என்பது சிறந்ததன்று, வானமருங்கோயில் (பா.4)
வான்தோயுங்கோயில் (பா.7).
2. பொ-ரை.
அலைகள் நிறைந்த குளிர்ந்த கங்கையையும்,
பிறையையும் முடியிற்சூடி அழகிய கைகளில் கொல்லும் தன்மை
|