பக்கம் எண் :

669

2089.







போதின்மே லயன்றிருமால்
     போற்றியும்மைக் காணாது
நாதனே யிவனென்று
     நயந்தேத்த மகிழ்ந்தளித்தீர்
தீதிலா அந்தணர்கள்
     தீமூன்றோம்புந் திருநல்லூர்
மாதரா ளவளோடு
     மன்னுகோயில் மகிழ்ந்தீரே.   9
 2090.



பொல்லாத சமணரொடு
     புறங்கூறுஞ் சாக்கியரொன்
றல்லாதா ரறவுரைவிட்
     டடியார்கள் போற்றோவா


அதனைக் கண்டு உகந்தவரே! தீயசெயல்களை விரும்பாத அந்தணர்கள்
பரவிப் போற்றும் திருநல்லூரில் உள்ள பெருமை பொருந்திய கோயிலையே
நும் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.

     கு-ரை: காது-காதில். கறுத்த-கோபித்த. கருநிறமுடைய ‘நீலமாமணி
நிறத்து அரக்கனை இருபது கரத்தொடு ஒல்கவாலினால் கட்டிய வாலியார்’
(தி.3 ப.91 பா.8). மாது-காதல். மறுகும் வண்ணம்-கலங்கும்படி. கண்டு
உகத்தல்;- மகிழ் விளையாட்டு. தீது அமரா - தீ வினையை வெறுத்த.
மாது-பெருமை.

     9. பொ-ரை: தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும், திருமாலும்
போற்றியும் உம்மைக் காணாது பின் இவனே பரம்பொருள் என்று விரும்பி
ஏத்த மகிழ்ந்து, அவர்கட்கு அருள் செய்தவரே! தீதில்லாத அந்தணர்கள்
முத்தீயோம்பும் திருநல்லூரில் மன்னும் கோயிலில் உமையம்மையரோடு
மகிழ்ந்து உறைகின்றீர்.

     கு-ரை: போது-செந்தாமரைப்பூ. அயன்-பிரமன். ‘நாதனே இவன்’
என்று ஏத்தமகிழ்ந்து அளித்தீர். நயந்து-விரும்பி, பக்திகொண்டுமாம். தீ
மூன்று- ஆகவநீயம், காருக பத்தியம், தாட்சிணாக்கினி. மாதராள்-
அழகுடையாராகிய உமாதேவியார். மன்னு-நிலையுற்ற.