பக்கம் எண் :

678

    * * * * * * * *          9
 2100.







தூசார்ந்த சாக்கியருந்
     தூய்மையில்லாச் சமணரும்
ஏசார்ந்த புன்மொழிநீத்
     தெழில்கொண்மாடக் குடவாயில்
ஆசாரஞ் செய்மறையோ
     ரளவிற்குன்றா தடிபோற்றத்
தேசார்ந்த கோயிலே
     கோயிலாகச் சேர்ந்தீரே.   10


திறந்து தளர்ச்சியுற அழலுருவாய் நிமிர்ந்தவரே! இராவணனின் பெரிய
முடிகளையும் அடிகளையும் அடர்த்தவரே! குடவாயிலின் ஒரு பகுதியாக
விளங்கும் கோயிலை நும் கோயிலாகக் கொண்டு அறம் உரைத்தீர்.

     கு-ரை: கொங்கு-தேன், மணம், கமலத்து அயனும். தாமரை மீதுள்ள
பிரமனும். குறளாய்-வாமனமூர்த்தியாய். நிமிர்ந்தானும்-விக்கிரமனும்.
அங்காந்து-வாய்திறந்து. தள்ளாட-அசைய. தம் காதல்-தம்முடைய காதலை
விளக்கக்கூடிய. மா-பெரிய. தாளும்-அடியும். பங்கு-கூறு.

     9. * * * * * * *

     10. பொ-ரை: அழுக்கேறிய உடையினராகிய சாக்கியரும்
தூய்மையில்லாத சமணர்களும் கூறும் ஏசுதல் நிறைந்த புன் மொழிகளை
வெறுத்து அழகிய மாடவீடுகளைக் கொண்டுள்ள குடவாயிலில்,
தூய்மையாளர்களாகிய அந்தணர் நல்லொழுக்கமாகிய அளவில்
குறையாதவராய் அடியிணைகளை ஏத்த, ஒளிநிறைந்த கோயிலையே நும்
கோயிலாகக் கொண்டு சேர்ந்துள்ளீர்.

     கு-ரை: தூசு-துரிசு ஏறிய உடை. தூய்மை-பரிசுத்தம். ஏசு-இகழ்ச்சி.
புன்மொழி-புல்லிய சொற்கள். நீத்து-நீக்கி. எழில்-அழகு. மாடம்-
மாடக்கோயில்; மாடங்களையுடைய எனினுமாம்.

     ஆசாரம்-நல்லொழுக்கம். (வைதிக மார்க்கம்). குன்றாது-குறையாது.
தேசு-ஒளி.