பக்கம் எண் :

694

உண்ணின் றுருக வுகவை தருவா
     ரூர்போலும்
பண்ணின் மொழியார் பாட லோவாப்
     பாசூரே.                 7
2120.







தேசு குன்றாத் தெண்ணீ ரிலங்கைக்
     கோமானைக்
கூச வடர்த்துக் கூர்வாள் கொடுப்பார்
     தம்மையே
பேசிப் பிதற்றப் பெருமை தருவா
     ரூர்போலும்
பாசித் தடமும் வயலுஞ் சூழ்ந்த
     பாசூரே.                 8


உடைய திங்கள்.

     7. பொ-ரை: இரு கண்களுக்கு அயலே நெற்றியில் மூன்றாவதாக
ஒரு கண்ணை உடையவர். தம் திருவடிகளை நினைந்து எண்ணும்
போதெல்லாம் உவகைகள் தருபவர். அவரது ஊர் பண்ணிசைபோல
மொழிகள் பேசும் பெண்கள் பாடும் ஓசை நீங்காத பாசூராகும்.

     கு-ரை: கண்ணின் அயலே-வலக்கண்ணுக்கும் இடக் கண்ணுக்கும்
அயலாகும் மேற்பக்கத்தில். கண் ஒன்று-நெற்றிக் (தீக்) கண்ணொன்றை.
கழல்-திருவடி. உன்னி-நினைந்து. எண்ணும் தனையும்-அத்திருவடிச்
சிறப்பைக் கருதுமளவும். உவகை-உவப்பிற்குரிய வரங்களும் முத்தி
இன்பமும். ‘உகவை’ என்று கழகப்பதிப்பி்ல் இருப்பது ‘தான்நினைத்தைம்
புலனும் அழிந்தசிந்தையந்தணாளர்’ (தி.1 ப.53 பா.6) என்பதில் புலனும்
என்று புள்ளிமாறியது போல் இதிலும் புள்ளி மாறி நின்றவாறறிக. (பார்க்க:
பதி.19 பா.3.) உவகை தருவான்:- மதுரை ஞானசம்பந்தப்பிள்ளை பதிப்பில்
‘உவகை’ என்றே உளது. அடங்கன் முறைப் பதிப்புகளில் அப்பதிப்பே
மிகமேலானது என்பது அறிஞர் முடிபு. ‘உரந்தோன்றும் பாடல் கேட்டு
உபவையளித்தீர் இபவாந்தோர்புரந்தோண்ளும் மும்மதிலும் எரியச் செய்தீர்’
(தி.2 ப.54 பா.8) பண்ணின்-பண்ணைப்போன்ற. மொழியார்-மொழிகளை
உடைய மகளிர். ஓவா-ஒழியாத. ‘பாரின் மிசையார் பாடல் ஓவா’ (பா.2)