பக்கம் எண் :

704

2132.







கரியா னோடு கமல மலரான்
     காணாமை
எரியாய் நிமிர்ந்த வெங்கள் பெருமா
     னென்பார்கட்
குரியா னமர்க் கரியான் வாழு
     மூர்போலும்
விரியார் பொழிலின் வண்டு பாடும்
     வெண்காடே.                     9
2133.







பாடு மடியார் பலருங் கூடிப்
    பரிந்தேத்த
ஆடு மரவம சைத்த பெருமா
    னறிவின்றி
மூட முடைய சமண்சாக் கியர்க
    ளுணராத
வேட முடைய பெருமான் பதியாம்
     வெண்காடே.                    10


     9. பொ-ரை: கரிய திருமாலும் கமலமலரில் உறையும் நான்முகனும்
அடி முடி காண இயலாதவாறு எரியுருவாய் நிமிர்ந்த எங்கள் பெருமானே!
என்பார்கட்கு உரியவனும் அமரர்க்கு அரியவனுமான சிவபிரானது ஊர்,
வண்டுகள் பாடும் விரிந்த பொழில்கள் சூழ்ந்த திருவெண்காடாகும்.

     கு-ரை: கரியான்-மாயன். கமல மலரான்-தாமரையில் வாழும் பிரமன்.
காணாமை-காணமாட்டாத வகை. எரி-தீப்பிழம்பு என்பார். கட்கு-என்று
துதிக்கும் அடியவர்களுக்கு. உரியான்-அருளும் உரிமை உடையவன்.
‘அமரர்க்கு அரியான்’ (பா.6). விரி-விரிவு. பொழிலின் - சோலைக்கண்.

     10. பொ-ரை: பாடுகின்ற அடியவர் பலரும் கூடிப் பரிவுடன் ஏத்த
ஆடும் பாம்பை இடையிற்கட்டியுள்ளவனாகி, அறிவற்ற மூடர்களாகிய சமண்
சாக்கியர்கள் உணர இயலாத வேடம் கொண்ட பெருமானது பதி
வெண்காடாகும்.

     கு-ரை: பாடும் அடியார்-பண்ணொன்ற இசை பாடும்