பக்கம் எண் :

705

2134.







விடையார் கொடியான் மேவி யுறையும்
     வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங்
     காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன்
     தமிழ்வல்லார்க்
கடையா வினைக ளமர லோகம்
     ஆள்வாரே.
                 11


                     திருச்சிற்றம்பலம்


அடியார்கள். அரவம். பாம்பு-அசைத்த-கட்டிய. உணராத வேடம்-
உணரமாட்டாத சிவஞான வேடம்.

    11. பொ-ரை: விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி
உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து
விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும்
இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத
வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.

    கு-ரை: விடை ஆர்கொடியான்-எருது எழுதிய கொடியை
உடையவன். மேவி-விரும்பி. உறையும்-எழுந்தருளியிருக்கும். கடை ஆர்
மாடம்-கடைவாயில் பொருந்திய மாடம். இது காழிக்கு அடை. நடை-
ஒழுக்கம். ஞானசம்பந்தன் வெண்காட்டைத் ‘தொழுத’ தமிழ் என்று ஒரு
சொல்வருவித்தியைக்க. வல்லார்க்கு வினைகள் அடையா. வல்லார்
அமரலோகம் ஆள்வார்.