பக்கம் எண் :

711

2142.



புலியி னுரிதோ லாடை பூசும்
     பொடிநீற்றர்
ஒலிகொள் புனலோர் சடைமேற் கரந்தா
     ருமையஞ்ச


யானையின்தோலைப் போர்த்தவர். மழுவேந்தியவர். மேன்மையானவர்.
மதியை அணிந்தவர். உலகைப் படைப்பவர்.

     கு-ரை: நீலவடிவர் மிடறு-திருநீலகண்டர். நெடியர்-நீண்டவர்.
(உயர்ந்தோங்கிய நிலையின் எல்லையில்லாதவர்). ‘உம்பராலும்
உலகின்னவராலும் தம்பெருமை அளத்தற்கரியான்’ (தி.1ப.29பா.5).
‘நுண்ணியான் மிகப்பெரியான்.’ (தி.1ப.61 பா.6) நிகரில்லார்-(அதுலர்).
ஒப்பிலியப்பன். கோலவடிவு தமது ஆம் கொள்கை அறிவு ஒண்ணார்.
பல உருவன் (தி.1 ப.13 பா.2). ‘நானாவித உருவாய் நமையாள்வான்’ பல
பல வேடமாகும் பரன் தன்மை யாரும் அறிவாரில்லை (தி.2 ப.6 பா.2.).
ஓதி யாரும் அறிவார் இல்லை-ஆர்க்கும் அறிவரியான். காலர் கழலர்-
கழலணிந்த திருவடி உடையார். காலர்-காலரூபர், வாயுரூபர் எனலும்.
கூற்றை உதைத்தவரெனலும் ஆம். கரியின் உரியர்-யானைத் தோல்
உடையவர். மழுவாளர்-மழுவை ஆள்பவர், மழுவாளை உடையவர்.
மேலர் மதியர்-பிறையைச் சடைமேல் அணிந்தவர். மேலானவரும் ஞான
சொரூபரும் ஆம். காலர் கழலர் மேலர் மதியர்: -வடநூலார் மதம்பற்றி
அடைமொழிக்கும் அடைகொளியின் விகுதி கொடுத்துக் கூறியனவாக்
கொள்ளலும் ஆம். ‘நுண்ணறிவால் வழிபாடுசெய்யுங் காலுடையான்’ (தி.1
ப.5 பா.4). ‘காலனுயிர் செற்றகாலன்’ (தி.1 ப.45 பா.4) எனலும் அமையும்.
பவமலி தொழிலது நினை விதியா:்- படைப்பவரானவர். ‘அரியானை. . .
கரியானை நான்முகனை. . . பிறவாநாளே’ (தி.6 ப.1 பா.1). ‘படைத்தளித்
தழிப்ப மும்மூர்த்திகளாயினை’ (தி.1 ப.128 பா.4). ‘அயனவனாய்’ (தி.3 ப.13
பா.5). ‘வேதவிதியானை’ (தி.1 ப.128. 4.) ‘எனதுள்ளம் விடகிலா விதியே‘
(தி.7 ப.385.) ‘ பவமலிதொழிலது நினைவொகு பதுமன் நன் மலரது மருவிய
சிவன்’ (தி.1 ப.2 பா.1) என்பதில், பிரமனது இதய கமலத்திலிருந்து சிவபிரான்
படைப்பித்தருள்வதாகக் குறித்த உண்மை உணர்க.

     8. பொ-ரை: திருமீயச்சூர் இறைவர் புலியின் தோலாகிய
ஆடையையும் பூசும் திருநீற்றுப் பொடியையும் அணிந்தவர். ஆரவாரித்து
வந்த கங்கையை ஓர் சடைமேற் கரந்தவர். உமையம்மை அஞ்ச வலிமையான
திரண்ட தோள்களையும் வன்கண்மையையும் உடைய அரக்கர்கோனை மெலியுமாறு மலையின் கீழ் அடர்த்தவர்.