பக்கம் எண் :

713

2144.







கண்டார் நாணும் படியார் கலிங்க
     முடைபட்டைக்
கொண்டார் சொல்லைக் குறுகா ருயர்ந்த
     கொள்கையார்
பெண்டான் பாக முடையார் பெரிய
     வரைவில்லா
விண்டார் புரமூன் றெரித்தார் மீயச்
     சூராரே.                          10
2145.



வேட முடைய பெருமா னுறையு
     மீயச்சூர்
நாடும் புகழார் புகலி ஞான
     சம்பந்தன்


பின்னும் ‘மரக்கால்’ என வழங்கப் படுவதுபோல, ‘பத்திரம் எழுதினான்’
என்பது முதலியவற்றையும் நோக்குக. கரியகண்டத்தார்-திருநீலகண்டர்.
போது-பூ. போது இ(ல்)லவனும்-தாமரைப் பூவை இல்லமாக உடைய
பிரமனும். பொங்கும் எரி-மிக்க தீ. வண்டு கோதி அறை பூ என்க.
பொய்கை-குளம். மேதி-எருமை.

     10. பொ-ரை: கண்டவர் நாணும்படியாக ஆடையின்றித் திரியும்
சமணர், கலிங்கமாகிய பட்டாடையை உடுத்த தேரர் ஆகியோர்
கூறுவனவற்றை உயர்ந்த சிவநெறிக் கொள்கையர் குறுகார். திருமீயச்சூர்
இறைவர் பெண்ணைப் பாகமாக உடையவர். பெரிய மலையாகிய வில்லால்
பகைவரின் முப்புரங்களை எரித்தவர்.

     கு-ரை: கண்டார் நாணும்படியார்-திகம்பர சைனர். ஆடையில்லாதவர்.
கலிங்கம். . . கொண்டார்-ஆடை உடைய தேரர். முடை என்று கொண்டு
நாற்றம் எனலுமாம். கலிங்கமாகிய பட்டுடையை என்றலே பொருத்தம்.
உயர்ந்த கொள்கையார் ( சைவர்) அவ்விருதிறத்தவர் சொல்லைக் குறுகார்
என்க. பெண்தான்பாகம்-மங்கைபங்கு. விண்டார்-பகைவர்.

     11. பொ-ரை: பற்பல வடிவங்களைக் கொண்டருளிய பெருமான்
உறையும் திருமீயச்சூரை விரும்பும் புகழார்ந்த புகலி ஞானசம்பந்தன்
அருளிய பாடலாகிய தமிழ் ஈரைந்தையும் மொழிந்தும் நினைத்தும் ஆடும்
அடியவர் அகன்றவானுலகை அடைவர்.