|
தெள்ளி
வருநீ ரரிசிற் றென்பால்
சிறைவண்டும்
புள்ளு மலிபூம் பொய்கை சூழ்ந்த
புத்தூரே.
6 |
2152. |
நிலந்த
ணீரோ டனல்கால் விசும்பி
னீர்மையான்
சிலந்தி செங்கட் சோழனாகச்
செய்தானூர்
அலந்த வடியா னற்றைக் கன்றோர்
காசெய்திப்
புலர்ந்த காலை மாலை போற்றும்
புத்தூரே.
7
|
எழுந்தருளிய ஊர்,
தெளிவாக வரும் நீரை உடைய அரிசிலாற்றின் தென்கரையில் சிறைவண்டும் பறவைகளும் நிறைந்து
வாழும் அழகிய பொய்கைகள் சூழ்ந்த புத்தூர் ஆகும்.
கு-ரை:
வள்ளி முலை தோய் குமரன்:-குறவி தோள் மணந்த
செல்வக்குமரவேள் (தி.4 ப.60 பா.3). வள்ளிவளைத்தோள் முதல்வன்
(தி.6 ப.3 பா.2). நம் செந்தில் மேய வள்ளி மணாளற்குத் தாதை
(தி.6 ப.23 பா.4). வான்-விண்ணிடம். வான்றோயும் மலை. விடை-எருது.
வெண்ணிறத்தால் ஒப்புணர்த்த வெள்ளிமலை எனப்பட்டது. தெள்ளி-
தெளிந்து. தென்கரை (பா.1). வண்டும் புள்ளும் மலிபூம் பொய்கை சூழ்ந்த
புத்தூர் (பா.6) என்று வளங்கூறிய சிறப்புணர்க.
7.
பொ-ரை:
நிலம், தண்ணீர், அனல், காற்று, விசும்பு ஆகிய
ஐம்பூதங்களின் இயல்பை உடையவன். சிலந்தியைக் கோச்செங்கட்
சோழனாகப் பிறக்கச் செய்தவன். அவனது ஊர் வறுமையுற்ற புகழ்த்
துணையார் என்னும் சிவமறையவர் அன்றைக்கன்று ஒரு காசினை அருளப்
பெற்றுப் புலர்ந்த காலையிலும் மாலையிலும் போற்றி வழிபட்ட புத்தூராகும்.
கு-ரை:
நிலம், தண்(குளிர்ந்த)நீர், அனல்(-தீ), கால்(-காற்று)
விசும்பு(-ஆகாயம்) என்னும் ஐம்பெருங் காரண பூதங்களின்
|