|
உற்றல
ரொன்றிலர் போலு
மோடு முடிக்கிலர் போலும்
பெற்றமு மூர்ந்திலர் போலும்
பிரம புரமமர்ந் தாரே. 10 |
2177.
|
பெண்ணுரு
வாணுரு வல்லாப்
பிரம புரநகர் மேய
அண்ணல்செய் யாதன வெல்லா
மறிந்து வகைவகை யாலே
நண்ணிய ஞானசம் பந்த
னவின்றன பத்தும்வல் லார்கள்
விண்ணவ ரோடினி தாக
வீற்றிருப் பாரவர் தாமே. 11
திருச்சிற்றம்பலம்
|
புலனாகாதவர். ஆல்
நிழற் கீழ்ப் பற்றற்றவர்களாகிய சனகாதிமுனிவர்
நால்வர்க்கு அறங்கள் உரைத்தவர். எதனையும் சார்ந்து நில்லாதவர்.
ஒன்றுமில்லாதாரைப் போலத் தோன்றுபவர். தலையோட்டை முடியில்
தரித்தவர். விடை ஊர்ந்துவருபவர்.
கு-ரை:
வெறுமை அரைசீவரத்தார் - ஆடையில்லாச்சமணர்.
சீவரம் - பழுப்பேறிய ஆடை. துவர் ஊட்டின சீலையும் ஆம்,
சீவரம் போர்த்தல் மத்திம தேசத்தார் ஆசாரம் அன்றோ மூத்தோர்
முன் இளையார் போர்வை வாங்குவது போல (நீலகேசி 3:13, உரை).
அற்றவர் - பற்று ஒன்றுமில்லாதவர். அற்றவர்க்கு அற்ற சிவன்
பெம்மாற்கு அற்றிலாதவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சுமாறே
(திருவா-514). நால்வர் - சனகாதியர். அலர் - பழி. முடிக்கு -
சடைமுடிக்கு. ஓடு - தலையோடு. தலைமாலை தலைக்கணிந்து
பெற்றம் - எருது.
11.
பொ-ரை: பெண்ணுருவமும் ஆணுருவமும் அல்லாத
(மாதொருபாகராக) பிரமபுரநகரில் உகந்தருளிய தலைமையை
உடைய சிவபிரான் செய்யாத செயல்களைச் செய்தனபோலக்
கூறும் இயல்புகளையெல்லாம் அறிந்து வகை வகையாக விரும்பிய
ஞானசம்பந்தன் நவின்ற இப்பதிகப் பாடல்கள் பத்தையும்
ஓதவல்லவர்கள் விண்ணவர்களோடு இனிதாக வீற்றிருப்பர்.
|