2180.
|
முத்தி
தருவது நீறு
முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு
தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு
பரவ வினியது நீறு
சித்தி தருவது நீறு
திருவால வாயான் திருநீ்றே. 3 |
2181.
|
காண
வினியது நீறு
கவினைத் தருவது நீறு
பேணி யணிபவர்க் கெல்லாம்
பெருமை கொடுப்பது நீறு |
கொடிய பிறவித் துயரம்
முதலியவற்றைத் தீர்ப்பது. சிவஞானத்தைத்
தருவது. அறியாமை முதலிய புன்மைகளை நீக்குவது. ஆசிரியர்
மாணக்கர்க்கு ஓதத்தகும் அளவு பெருமை உடையது. ஓதும்போது
அணியத் தகுதியுடையது. உண்மையில் நிலைபெற்றிருப்பது. உண்மை -
மெய்ப்பொருளுமாம். சீதம் - குளிர்ச்சி. புனல் - நீர்.
3.
பொ-ரை: திரு ஆலவாயான் திருநீறு வீடுபேறு அளிப்பது.
முனிவர்களால் அணியப் பெறுவது. நிலையாக எப்போதும் உள்ளது.
தக்கோர்களால் புகழப்படுவது. இறைவனிடம் பக்தியை விளைப்பது.
வாழ்த்த இனியது. எண்வகைச் சித்திகளையும் தரவல்லது.
கு-ரை:
வீட்டை அளிப்பது; எல்லாச் செல்வங்களையும்
வெறுத்தவர் முனிவர். முனிவு - வெறுப்பு; கோபம். முனிவர் (முநிவர்) -
மனன சீலர் எனலுமாம். அணிவது - அழகு செய்வது, பூண்பதுமாம்.
சத்திய - எப்பொழுதும் உள்ளது. தக்கோர் - சிவனடியார். பத்தி -
திருவடிக்கன்பு. பரவ - வாழ்த்த. சித்தி - எண்வகைச் சித்தி. அணிமா
முதலியன.
4.
பொ-ரை: திரு ஆலவாயான் திருநீறு கண்களுக்கு இனிமை
தருவது. அழகைக் கொடுப்பது. விரும்பி அணிவார்க்குப் பெருமை
கொடுப்பது. இறப்பைத் தடுப்பது. அறிவைத் தருவது. உயர்வு அளிப்பது.
கு-ரை:
பால் வெண்ணீறாய், தன்னை அணிந்தோரைப் பிறர்
|