பக்கம் எண் :

767

2209.







ஆடை தவிர்த்தறங் காட்டு
     மவர்களு மந்துவ ராடைச்
சோடைக ணன்னெறி சொல்லார்
     சொல்லினுஞ் சொல்லல கண்டீர்
வேடம் பலபல காட்டும்
     விகிர்தனம் வேத முதல்வன்
காடதனினட மாடுங்
     கண்ணுத லான்கடம் பூரே.          10
2210.



விடைநவி லுங்கொடி யானை
     வெண்கொடி சேர்நெடு மாடம்
கடைநவி லுங்கடம் பூரிற்
     காதல னைக்கடற் காழி


பட்டில ஆயினும், இவ்வாறு வரலாற்றை முன்பின் ஆகக் கூறவில்லை.

     10. பொ-ரை: ஆடையின்றி அறங்கூறும் அமணர்களும், துவராடை
உடுத்து அறநெறிபோதிக்கும் பதர்களாகிய புத்தர்களும் நன்னெறிகூறிச்
சொன்னாலும் அவை மெய்ச்சொற்களல்ல. பல்வேறு வடிவங்களைக்
கொண்டருளும் சிவபிரானும், நம் வேதமுதல்வனும் சுடுகாட்டுள் நடனமாடும்
கண்ணுதலோனுமாகிய பெருமான் எழுந்தருளியிருப்பது கடம்பூராகும்.

     கு-ரை: ஆடை தவிர்த்து அறம்காட்டுமபவர்களும் - ஆடை
உடுக்காமல் தர்மோபதேசம் செய்யும் அமணர்களும். அம்துவர்
ஆடைச்சோடைகள்:- சிவப்பு ஊட்டிய உடைகளைத் தரித்த வறட்சியர்
(பொருளில்லாத பேச்சுடையார் என்றவாறு). நல்நெறி - நல்லவழி
(ஞானமார்க்கம்). சொல்லினும் சொல் அல - சொல்லினாலும் அவை
மெய்ச்சொற்கள் அல்ல. வேடம் பலபல காட்டும் விகிர்தன்:- பல
வேடமாகும் பரன் நம் வேத முதல்வன். காடதனில் - காட்டில். ‘கள்ளி
முதுகாட்டில் ஆடிகண்டாய்’ (தி.6 ப.23. பா.4).

     11. பொ-ரை: விடைச்சின்னத்தை அறிவிக்கும் கொடியை
உடையவனை, வெண்கொடிகள் சேர்ந்த உயரிய வாயில்களைக் கொண்ட
மாடவீடுகளை உடைய கடம்பூரில் விருப்புடையவனை, கடலை அடுத்துள்ள
காழிமாநகரில் தோன்றிய நன்னடை உடைய