பக்கம் எண் :

772

2215.







போகமு மின்பமு மாகிப்
     போற்றியென் பாரவர் தங்கள்
ஆகமு றைவிட மாக
     வமர்ந்தவர் கொன்றையி னோடும்
நாகமுந் திங்களுஞ் சூடி
     நன்னுதன் மங்கைதன் மேனிப்
பாகமு கந்தவர் தாமும்
     பாண்டிக் கொடுமுடி யாரே.          5
2216.



கடிபடு கூவிள மத்தங்
     கமழ்சடை மேலுடை யாரும்
பொடிபட முப்புரஞ் செற்ற
     பொருசிலை யொன்றுடை யாரும்


    கு-ரை: நறை - தேன். ஞாலம் - பூமி. கறை - நச்சுக்கறுப்பு. மா -
கரிய; அழகுமாம். மிடற்றார் - கண்டத்தையுடையவர். அரங்கு ஆ -
நாடகசபையாக. கனல் - தீ. மறைவளர் பாடல் - வேதப்பாடல். மண்
முழவம் - மார்ச்சனையையுடைய முழா. குழல் - வேய்ங்குழல். மொந்தை -
ஒரு கட்பறை. பறை-வாத்தியம். சொல் எனலுமாம்.

    5. பொ-ரை: பாண்டிக்கொடுமுடி இறைவர், போகமும் அதனால்
எய்தும் இன்பமும் ஆனவர். போற்றி என்று கூறுவார் உடலை
உறைவிடமாகக்கொண்டு அமர்பவர். கொன்றை, பாம்பு, திங்கள் ஆகியன
வற்றை முடியில் சூடி உமைபாகம் உகந்தவர்.

    கு-ரை: போகமும் இன்பமும் ஆகி - பெத்தத்தில், தநுகரண
புவனங்களொடு சேர்த்து நான்காவதாக எண்ணப்படும். போகமும்,
அப்போகாநுபவம் பற்றி உயிர்க்கு எய்தும் சிற்றின்பமும், முத்தியில்
சிவபோகமாம் சிவாநந்தமும் ஆகி. ஆகம்-சுத்தியால் ஓங்கிய தேகம்.
உறைவு இடம் - வாழ்தலையுடைய இடம், கோயில். ‘ஊன் உடம்பு ஆலயம்’
(திருமந்திரம்). ‘ஓங்குடலம் திருக்கோயில்’ (ஞான பூஜா விதி.9). நாகம் -
பாம்பு. நல்நுதல் மங்கை - அழகிய நெற்றியையுடைய உமாதேவியார்.
மேனிப்பாகம் - திருமேனியிற் பாதி. உகந்தவர் -விரும்பியவர்.

    6. பொ-ரை: பாண்டிக்கொடுமுடி இறைவர், மணம் பொருந்திய
வில்வம், ஊமத்தை ஆகியவற்றைச் சடையின்மேல் உடையவர். முப்